கள்ளகாதலால் நடந்த கத்தி குத்து -கணவனின் வெறி செயல்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் வசித்துவரும் சுந்தரராஜன், மனைவி பத்மா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர், பத்மா திருமணத்திற்கு பிறகு பிறரின் மீது தீராத காதல் கொண்டு வந்துள்ளார், இதில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள சாமியாம்பாளையத்தில் வசித்துவரும் அன்பரசு என்பவரை தன் காதல் வலையில் சிக்கவைத்தார், அன்பரசு ஏற்கனவை திருமணமானர் என்பது தெரிந்தும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பத்மா அன்பரசுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த பத்மாவிற்கு மூன்றே மாதத்தில் அன்பரசுவின் மீது ஏற்பட்ட காதல் கசக்க ஆரம்பித்தது, இதை தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்செல்வன் என்பவரை காதல் வலையில் விழ வைத்தார், அதன் பின்னர் தமிழ்செல்வனுடன் இருசக்கர வாகனத்தில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார், இதைக்கண்ட பத்மாவின் இரண்டாவது காதலன் அன்பரசு கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
சம்வம் நடந்த அன்று சாமியாம்பாளையத்திலிருந்து கத்தேரி பகுதிக்கு தமிழ்செல்வனுடன் பத்மா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இதைக்கண்ட அன்பரசு மிளகாய் பொடி தூவி அவர்களை வழிமறைத்துள்ளார், கோபமாக இருந்த அன்பரசுவை கண்டதும் தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் காதலி பத்மா அன்பரசுவிடம் சிக்கியுள்ளார், அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் காதலி பத்மாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்பு அன்பரசு இரத்த கரையுடன் கூடிய கத்தியுடன் தேவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவை குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை செய்து உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அன்பரசுவிடம் விசாரனை நடத்திய போலீசார், கத்தியால் குத்தப்பட்ட பத்மா நேரத்திற்கு ஏற்றவாறு காதலர்களை மாற்றி வந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.