ஈரோடு

கள்ளகாதலால் நடந்த கத்தி குத்து -கணவனின் வெறி செயல்.

Quick Share

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் வசித்துவரும் சுந்தரராஜன், மனைவி பத்மா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர், பத்மா திருமணத்திற்கு பிறகு பிறரின் மீது தீராத காதல் கொண்டு வந்துள்ளார், இதில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள சாமியாம்பாளையத்தில் வசித்துவரும் அன்பரசு என்பவரை தன் காதல் வலையில் சிக்கவைத்தார், அன்பரசு ஏற்கனவை திருமணமானர் என்பது தெரிந்தும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பத்மா அன்பரசுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த பத்மாவிற்கு மூன்றே மாதத்தில் அன்பரசுவின் மீது ஏற்பட்ட காதல் கசக்க ஆரம்பித்தது, இதை தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்செல்வன் என்பவரை காதல் வலையில் விழ வைத்தார், அதன் பின்னர் தமிழ்செல்வனுடன் இருசக்கர வாகனத்தில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார், இதைக்கண்ட பத்மாவின் இரண்டாவது காதலன் அன்பரசு கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

சம்வம் நடந்த அன்று சாமியாம்பாளையத்திலிருந்து கத்தேரி பகுதிக்கு தமிழ்செல்வனுடன் பத்மா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இதைக்கண்ட அன்பரசு மிளகாய் பொடி தூவி அவர்களை வழிமறைத்துள்ளார், கோபமாக இருந்த அன்பரசுவை கண்டதும் தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் காதலி பத்மா அன்பரசுவிடம் சிக்கியுள்ளார், அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் காதலி பத்மாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்பு அன்பரசு இரத்த கரையுடன் கூடிய கத்தியுடன் தேவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவை குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை செய்து உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அன்பரசுவிடம் விசாரனை நடத்திய போலீசார், கத்தியால் குத்தப்பட்ட பத்மா நேரத்திற்கு ஏற்றவாறு காதலர்களை மாற்றி வந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

படுக்கை அறையில் மனைவியை குத்தி போட்டு கணவர் செய்த அதிர்ச்சி செயல் !!

Quick Share

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் பாலசுப்ரமணிக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று மனைவியின் வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணி தகராறு செய்துள்ளார். பிறகு கணவர் வீட்டுக்கே சித்ரா வந்து தங்கியுள்ளார். கணவர், தன்னை இரவு முழுவதும் அடித்து துண்புறுத்தியதாக சித்ராவின் தாயார் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளார்.

சித்ராவின் தாய் மல்லிகா மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட போது பாலசுப்ரமணியம் பேசியுள்ளார் அப்போது உங்கள் மகள் கோயிலுக்கு சென்றுள்ளதாக வந்தவுடன் பேச சொல்கிறேன் என கூறியுள்ளார்
அடுத்த 2 நாட்களாக சித்ராவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டும் பேச முடியாததல் சந்தேகமடைந்த மல்லிகா நேற்று தனது மகளைப் பார்ப்பதற்காக தாண்டாம்பாளையத்திற்கு வந்துள்ளார்.

வீடு பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டையுடைத்து வீட்டினுள் சென்ற பார்த்த போது படுக்கையறையில் கத்தியால் குத்தப்பட்டு படுக்கை அறையில் மறைத்து வைத்தபடி அழுகிய நிலையில் சித்ரா இறந்து கிடந்துள்ளார்.

மகள் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா சிவகிரி காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்ததன் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாகிய பாலசுப்பிரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.




You cannot copy content of this Website