மதுரை

கருப்புப்பட்டையுடன் கோசம்.., ஜல்லிக்கட்டில் பரபரப்பு

Quick Share

தமிழகத்தின் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி. காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்கப் பாய்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டில் எழுந்த குரல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

2 பேர் லுங்கியை முகத்தில் கட்டிக்கொண்டு செய்த கொள்ளை சம்பவம்.., சிக்கிய வீடியோ

Quick Share

கடந்த சனிக்கிழமை மதுரை சிலைமான் பேருந்து நிலையம் அருகே ராஜா என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையில்வழக்கம்போல பணிகளை முடித்தபின் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.”

அன்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள், பணப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கடையில் செல்போன்கள், பணம் திருடிபோனது பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, உடனே காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். முகம் தெரியாமல் இருப்பதற்காக தங்களது லுங்கியை முகத்தை மறைத்துக்கொண்டு மர்ம
நபர்கள் திருடியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மளிகை கடையில் ஒருமாத மாதமாக பல பொருட்களை திருடிய நபர் !! சிக்கிய வீடியோ

Quick Share

மதுரை கோமதி புரத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல மொபைல் போனில் பேசிக்கொண்டே பட்டப்பகலில் 2 கிலோ வெங்காயத்தை திருடி உள்ளார்.

அடுத்தது நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டு சென்றுள்ளார். கடையில் கூட்டம் இருந்ததால் கடை உரிமையாளர் கவனிக்கமுடியவில்லை.

கடை உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் சட்டை அணிந்த நபர் வெங்காயம் முதல் நொறுக்குத்தீனி வரை தொடும் காட்சிகள் பதிவாகி இருந்தன வெங்காயத்தை எளிதாக கிடைப்பதால் இதையே கிடைக்கவேண்டும் வந்துள்ளார்.

அந்த நபர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் 56 வயது அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது நிறைய கடைகளில் கடந்த ஒரு மாத காலமாக காலை உணவு முதல் மதியம் சாப்பாட்டு நேரம் வரை இதை செய்துள்ளார். இவர் திருடும் காட்சிகளை CCTV-யில் பதிவாகி இருந்தது அவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்




You cannot copy content of this Website