மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் உள்ள இலங்கை தமிழர் முகாம்- கண்ணீர் விட்டு கதறிய மகள்கள்! நடந்தது என்ன...

Quick Share

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்புக்கு இடையே மோதல்.

கைது நடவடிக்கையை முன்னெடுத்த பொலிசார்.

தமிழகத்தில் உள்ள ஒரு இலங்கை தமிழர் முகாமில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் போது குகன் என்பவா் போதையில் தகராறு செய்ததாகவும், அவரை போட்டி ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான சுதாகா் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், குகன், அவரது தம்பி தாஸ், நண்பா்கள் சோ்ந்து சுதாகரின் வீடு புகுந்து பெண்கள், குழந்தைகளை மிரட்டியுள்ளனா். அவா்களை முகாம் மக்கள் தாக்கினராம். இதையடுத்து, சுதாகரின் மனைவி சகாயராணி தனது 2 குழந்தைகள், முகாமைச் சோ்ந்த உறவினா் பெண் பஞ்சவா்ணம் ஆகியோருடன் குகன் தரப்பினா் மீது புகாரளிக்க மாசாா்பட்டி காவல் நிலையம் சென்றாா்.

அப்போது, பொலிசார் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு, இரு பெண்களையும் காவல் நிலையத்துக்குள் பல மணி நேரம் இருக்க வைத்தனராம்.

இதனால் அவரது அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் குகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு!பரபரப்பு சம்பவம் ..

Quick Share

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும் தெரியவந்துள்ளது.

பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து, வாளியில் சடலத்தை மறைத்து வைத்த தாய்!! அதிர்ச்ச...

Quick Share

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சோலை அழகுபுரம்பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் வேலை செய்கிறார். 

கடந்த செப்.23ம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது 8 வயது சிறுமி, கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்து அவரது மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, 2 வாரமாக தலைமறைவாக இருந்த காளிமுத்துவை, போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை மகளிடம் சொல்லி புலம்பியதாகவும், அதற்கு மகள் நாம் சாகலாம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மகளின் பேச்சை கேட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சடலத்தை வாளியில் வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார். பிறகு ரயிலில் விழுந்துசாகலாம் என புறப்பட்ட அவர், பயத்தில் சாக முடியாமல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது!

Quick Share

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ், சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பெண் காவலர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர். அதில் அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46),திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) ஆகிய இருவரை கைது செய்தனர். 

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், திருவேங்கடசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் இதேபோன்று விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில், நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய அதே பகுதியை சேர்ந்த சாந்தி(50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி(38),நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி(34) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்

அலட்சியம் …வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்சுகள்… குழந்தை இறந்ததால் அத...

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி (36). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா (33) இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவர் பிரசவ தேதி கொடுத்திருந்த நிலையில், வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அதன்படி நேற்று முன்தினம் மதியம் பிற்பகலில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து இல்லிடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 3 பேர் இருந்தனர். இதனால், மருத்துவர் வீடியோ காலில் ஆலோசனை கூறியுள்ளார். அப்போதும் குழந்தையின் தலை வராததால் மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், பணி நேரத்தில் இல்லாத மருத்துவர் பாலு என்பவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்த நபருக்கு வந்த பொம்மை ...

Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி. மெக்கானிக்கான இவர் தனது நண்பர் சுரேஷிற்காக பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்துள்ளார். அதோடு கிரெடிட் கார்ட் மூலம் செப்20ஆம் தேதி முழு பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பின் இன்று பார்சல் வந்துள்ளது. அப்போது அந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மொ கார் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரீதமான விளையாட்டு- தூக்கு போடுவது போல் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு..

Quick Share

சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடிய போது அவரது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தூக்கு கயிறில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார். பின்னர் இதனைக்கண்ட அவரது அண்ணன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து போலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தொடரும் தற்கொலை ….ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை!!

Quick Share

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லதா. இவருடைய மகள் ஹரிணி (வயது 16). இவர் பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 21-ந் தேதி பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஹரிணி காப்பி அடித்து பிடிபட்டதாகவும், இதனால் மாணவியை ஆசிரியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவி உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் மாணவி ஹரிணி படித்த பள்ளி நிர்வாகத்தின் மீதும், மாணவியை திட்டிய ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லாவரம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரும்பு பீரோவை மேல் மாடியிலிருந்து கீழே இறக்கும்போது மின்சாரம் தாக்கி மூவர் பலி!!கதறும்...

Quick Share

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வேல்பால் டிப்போ அருகே உள்ள சந்தைப்பேட்டை என்ற பகுதியில் வசிப்பவர் பச்சையப்பன். இவர் தனது முதல் மாடி வீட்டை இலியாஸ் என்ற நபருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில், இலியாஸ் தனது வாடகை வீட்டை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர நினைத்துள்ளார். 

அதற்காக நேற்று அவரது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல வேன் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் பொருட்களை ஏற்றும்போது அவர் வீட்டில் இருந்த இரும்பு பீரோவை கயிறு கட்டி கீழே இறக்கியுள்ளனர். இதற்கு வேன் ஒட்டுநர் கோபி, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், குமார் என்ற நபர் என 3 பேர் இலியஸுக்கு உதவி புரிந்துள்ளனர். அதன்படி 4 பேரும் சேர்ந்து பீரோவை கீழே இறக்கியுள்ளனர். 

அப்போது எதிர்பாராவிதமாக வீட்டை ஒட்டியபடி செல்லும் மின்சார கம்பியில் இரும்பு பீரோ உரசியது. இதில் மின்சாரம் அவர்கள் 4 பேர் மீதும் தாக்கியுள்ளது. இந்த மின் தாக்குதலில் இலியாஸ், பச்சையப்பன், வேன் ஓட்டுநர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை கண்டதும் பதறி போன அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த மூன்று பேர் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்டர் ஹீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாயும், மகளும் உயிரிழந்த ...

Quick Share

கோவை மாநகரை அடுத்த துடியலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கோவையில் உள்ள வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (52) மற்றும் மகள் அர்ச்சனா(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் அர்ச்சனா கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்காக தயாராகியுள்ளார். இதையொட்டி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பக்கத்தில் இருந்த தண்ணீரில் பாய்ந்துள்ளது. தண்ணீரை தொட்ட அர்ச்சனாவிற்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது. இதனால் அலறி துடித்துள்ளார்.

சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து அவரது அம்மா கார்த்திகா ஓடி வந்துள்ளார். அவர் தனது மகளை காப்பாற்ற உள்ளே வந்த போது அவருக்கும் ஷாக் அடித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அர்ச்சனாவை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்ஸிகாரர் வீட்டின் அருகே வந்துள்ளார். அவர் காலிங் பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும் பலனில்லை.

யாரும் போன் எடுக்கவில்லை. கதவும் திறக்கப்படவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பாத்ரூமில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மின்சாரத்தை துண்டித்தவர்கள் துடியலூர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைப் பெண்ணுக்கு ஜேர்மனியின் உயரிய விருது…

Quick Share

இந்தியப்பெண் ஒருவர் ஜேர்மனியின் உயரிய இலக்கிய விருதொன்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தவர் ஆவார்.

சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட இந்தியப்பெண் ஒருவருக்கு ஜேர்மனியின் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்தவர் மீனா கந்தசாமி.

சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட மீனாவுக்கு ஜேர்மனியின் இலக்கியத்திற்கான உயரிய விருதான Hermann Kesten என்னும் விருது வழங்கப்பட உள்ளது.

துன்புறுத்தப்படும் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்க தன்னிகரில்லாத வகையில் உழைப்போருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான Hermann Kesten விருதுக்காக மீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மீனா, 1984ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். முன்பு ‘The Dalit’ என்னும் பத்திரிகையில் பணியாற்றிய அவர், பின்னர் முழு நேர எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரானார்.

மீனாவுக்கு சமீபத்தில் Fellow of the Royal Society of Literature என்னும் கௌரவமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்த 6 வயது சிறுவன் பலி ..கதறும் குடும்பம்

Quick Share

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ் (13) அபினேஷ் (6) என்ற இரு மகன்களும் ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். 

அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் விளையாட சென்றுள்ளார். இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். 

அப்போது அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு சென்று தேடி பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனை பரிசோதனை செய்து டாக்டர் சிறுவன் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. சிறுவனின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது. 

மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை பார்த்த பொழுது சிறுவன் மாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி விளையாடிக் கொண்டிருப்பதும் இறுதியாக 7அடி ஆழமுள்ள குழி அருகே அமர்ந்து கொண்டிருப்பதும் அதில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது. அந்தக் குழியில் 4 அடி ஆழம் தண்ணீர் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்ததும் தெரிய வந்தது.




You cannot copy content of this Website