மாவட்ட செய்திகள்

டபுள் மீனிங்கில் பேசுகிறார் ஸ்டாலின்.., உதயநிதியை விளாசிய பேச்சு

Quick Share

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவின் செயல்திட்டங்களை விரிவாக எடுத்து கூறியதுடன், திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. அப்போது அப்சரா ரெட்டி திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசியது இது:”
ஸ்டாலின் கிராம சபையை ஸ்டாலின் பங்கேற்கிறார். கிராம சபையில் மொத்தமா திமுக உறுப்பினர்களையே உட்கார வைக்க ட்ரை பண்றார்..

ஏன் பாமர மக்கள் அவரை கேள்வி கேட்க கூடாதா?

ஏன் மகளிர் அவங்க பிரச்சனையை பேசக்கூடாதா?

கிராம சபையில் ஒவ்வொருத்தரின் பிரச்சனையை அறிந்து அதற்கு பதில் சொல்லணும். குண்டர்களை
வெச்சு பெண்களை தாக்குறது ஏன்?

இரட்டை அர்த்தம் ஒரே கல்லுல நிறைய மாங்காய் அடிச்சிட்டோம்னு சொல்றது? இவ்ளோ பெண்களை பார்க்கறது சந்தோஷமா இருக்குன்னு ரெட்டை அர்த்தத்துல நிறைய பேசறார் ஸ்டாலின். அந்த கட்சியில் இருக்கிறவங்களுக்கு பெண்களை சுத்தமா மதிக்க தெரியாது.

உதயநிதி முதல்வரை கீழ்த்தரமா பேசுகிறார். உதயநிதி அவங்க தாத்தா போட்ட பிச்சையில், அப்பா போட்ட பிச்சையில் மேடை ஏறி பேசறார். இந்த வாரிசு அரசியல் மட்டும் இல்லேன்னா இன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் எங்கே இருப்பார்? ஒருகால கட்டத்தில், அப்பா முதலமைச்சர், மகன் துணை முதல்வர், மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், உலகத்துல எங்காவது இப்படி நடக்குமா?

அவர் என்ன எல்லா ஆண்களையும் அவங்க அப்பா, தாத்தா மாதிரி நினைச்சுட்டாரா? எப்படி முதல்வரை தவறாக பேசலாம்? கவர்ச்சியாக பேசலாம்? இதெல்லாம் கண்டிக்கக்கூடிய விஷயங்கள். அதிமுகதான் இந்த முறை வெற்றி பெறும் எனஉறுதியாக பேசியுள்ளார். அப்சரா பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலனை நம்பி சென்ற அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்

Quick Share

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் வா தரையில் உள்ள இலக்கை வில்லுக்கு பின்புறம் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அவர் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 1ஆம் தேதி மாலை பணிக்குச் சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை எங்கே தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்ததில் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை ஒரே எண்ணிலிருந்து போன் வந்ததை கண்டறிந்த போன் வந்த எண்ணெய் ஆய்வு செய் அதில் அந்த எண் ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்து வந்த தங்கதுரை என தெரியவந்தது.

கள்ளிமந்தையம் போலீசார் தங்கதுரை பற்றி விசாரணையை மேற்கொண்டனர் பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் ஜெயந்தியும் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகி உள்ளன. 6 மாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை தன்னை திருமணம் செய்துகொள்ள ஜெயஸ்ரீ வற்புறுத்துவதாக அவரது வீட்டிற்கு போன் செய்ததால் ஜெயஸ்ரீயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கடந்த 31ஆம் தேதி அன்று இரவு தங்க துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ மறுநாள் அங்கு வருவதாகவும் தன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். 1ம் தேதி மாலை ஒட்டன்சத்திரத்தில் பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர் மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தங்கதுரை அவனது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே ஒரு புதரில் உடலை மறைத்து வைத்து விட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது.

இதற்கிடையே காதலனின் வெறிச்செயல் குறித்து அறிந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் கொலையாளிகள் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என கூச்சலிட்டு அவர்கள் மறியலை கைவிட்டு விட்டு ஜெயஸ்ரீயின் உடலை வாங்கிச் சென்றனர் கைது செய்யப்பட்ட தங்கதுரை மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் கள்ளிமந்தயம் போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் காதலில் விழுந்து காதலனை நம்பி சென்ற பாவத்திற்கு அப்பாவி பெண் கொல்லப் பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு

Quick Share

தூத்துக்குடியில் விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உட்பட 3பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மீனாட்சிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சதீஷ் (30), இவருக்கும் தூத்துக்குடி மூன்றாவது மைல், திருவிக நகரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 6.6.2019ல் திருமணம் நடந்துள்ளது.  திருமணத்தின் போது 30 பவுன் நகையும், ரூ.1லட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சதீஷின் மதுபழக்கத்தால் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதனால் கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் விவாகரத்து கேட்டு சதீஷ் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பினராம். ஆனால் விவாகரத்துக்கு பாக்கியலட்சுமி சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், அவரது தந்தை ஜெயக்குமார், தாய் சிரோன் மணி ஆகியோர் பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து பாக்கியலட்சுமி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கணவர் உட்பட 3பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

நிர்வாண நிலையில் 36 வயது பெண் இறந்து கிடந்த கொடூரம்..

Quick Share

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது.. இந்த நிறுவனத்தின் மாடிப்படிக்கட்டில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சென்று பார்த்ததில் அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக உடல் அழுகி போய் கிடந்தது.

பின்னர், சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். சம்பந்தப்பட்ட பெண் புதுச்சேரி மாநிலம் திருபுவனையை
சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது.. சத்யாவுக்கு 36 வயசாகிறது. கணவன் பெயர் ராஜேந்திரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

சத்யாவை நிர்வாண நிலையில் கொன்றார்கள் என்ற சந்தேகம் வலுத்தது. சிசிடிவி கேமிரா அதனால், அந்த
நிதி நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கடந்த 29-ந்தேதி இரவு 7 மணிக்கு சத்யா அந்த மாடியில் செல்வது பதிவாகி இருந்தது. சத்யாவுடன் இன்னொருவரும் சென்றார்.

முரசொலி மாறன் 29 என அடையாளம் காணப்பட்டார். புவனகிரியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறார்.அவர்தான் சத்யவை மாடிக்கு அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. இரவு 10 மணி அளவில் முரசொலிமாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்ததும் தெரிந்தது. கொலை இதனால் அவர்தான் சத்யாவை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

பிறகு, முரசொலி மாறனை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டைக்கு பிறகு முரசொலி மாறன் அவினாசியில் பதுங்கி இருப்பது தெரியவரவும், அங்கு சென்று அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர்..

போலீசார் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட முரசொலி மாறனோ, திடீரென தற்கொலைக்கு முயன்றார்.. அதாவது தன்னுடைய காதில் பால்டாயில் விஷத்தை ஊற்றி கொண்டார். அதை பார்த்த போலீசார் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் முரசொலி மாறனிடம் விசாரணை நடந்தது.. அப்போது
அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

இருவரும் ஒரு நூல் கம்பெனியில் வேலைபார்த்தோம். நட்பு உருவானது காதலானது.. அடிக்கடி தனிமையில்
சந்தித்து பேசி வந்தோம்.. எனக்கு புவனகிரியில் வேலை கிடைத்து வந்துவிட்டேன். ஆனாலும் சத்யாவுடன் பழக்கம் தொடர்ந்தது.. சம்பவத்தன்று சத்யா, என்னை பார்க்க ஆபீசுக்கு வந்தார்.

கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்யா தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.. நான் மறுத்துவிட்டேன்.. உடனே தகராறு செய்தார்.அதனால், கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். அங்கிருந்த படிக்கட்டில் சடலத்தை கொண்டு போய் போட்டுவிட்டு தப்பிவிட்டேன்” என்றார்.

குடும்பத்துக்காக உழைக்கும் கணவர் வெளிநாட்டில் இருக்க கள்ளகாதலுக்காக 2 குழந்தைகளையும் மறந்த சத்யாவின் வாழ்க்கை கொடூரமாக முடிந்துவிட்டது

நடிகையை ரூம் போட்டு முடித்துவிட்டு.. வீடியோ எடுத்து மிரட்டிய நபர் !

Quick Share

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (24). சினிமா நடிகையான இவர் தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை நடிகையாகவும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் திகதி சென்னையில் இருக்கும் ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக இருந்து வீடியோ எடுத்து காதலன் ராஜேஷ் என்பவர் மிரட்டி வருவதாக கூறி புகார் அளித்திருந்தார். புகாரின் பேரின் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ராதிகா, நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடிகை அளித்த புகாரின்படி, விசாரணை நடத்தினர். அதில் நடிகை அளித்த புகார் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.

தொடர்ந்து ராஜேஷ் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த ராஜேஷ் உடனடியாக தலைமறைவாகிவிட போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். ராதிகாவின் தோழியின் மூலம் சென்னை கீழ்க்கட்டளையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அறிமுகமானார். சின்னத்திரை நடிகை என்பதால் ராஜேஷ் அவர் சூட்டிங் எடுக்கும் பகுதிக்கு சென்று
தொடர்ந்து பேசி வந்துள்ளார். பிறகு காதலாக மாறியது.

ராதிகா சின்னத்திரையில் பிரபலமானவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதலில் ராதிகா மறுத்துள்ளார். பின்னர் ராஜேஷ் நடிகையின் பெற்றோரிடம் பேசி
திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இதையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் கடந்த 2019 டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி வெகு விமர்சையாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பிறகு இவர்களின் திருமணம் கடந்த 2020 பிப்ரவரி 26-ஆம் திகதி வடபழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்காக திருமண அழைப்பிதழும் அடித்துள்ளனர்.

ராஜேஷ் தான் வருங்கால கணவர் என்பதால் அவருடன் ராதிகா அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். அப்போது ராஜேஷ் ஈவன்ட் மேனேஜிமென்ட் என்ற பெயரில் நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி நடத்துவதாகவும், அந்த நிகழ்ச்சியை ராதிகா தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார். வருங்கால கணவர் என்பதால் ஆடம்பரமான உடையை அணிந்து கொண்டு நடிகை ராதிகா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் ராஜேஷ் நிகழ்ச்சி திடீரென ரத்து ஆகிவிட்டது என்று கூறி ஒரு அறைக்கு ராதிகாவை அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்,வந்ததும் வந்தாய் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே இருவரும் ஒன்றாக இருக்கலாம் இங்கு யாரும் வரமாட்டார்கள் என்று ராஜேஷ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். கணவராக வரப்போகும் நபர் தானே என்று, நடிகை ராதிகாவும் தனிமையில் இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது ராஜேஷ் நடிகை ராதிகாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகாவுக்கு
தெரியாமல் ஹோட்டல் அறையில் கேமரா வைத்து வீடியோவாக ராஜேஷ் எடுத்து வைத்துக்கொண்டார்.
பின்னர் நடிகையை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஷ் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு நடிகை தனது வருங்கால கணவர் என்ற முறையில் ராஜேசுக்கு போன் செய்து பேச முயற்சி செய்துள்ளார்.

ஆனால் நடிகையின் செல்போன் அழைப்பை ராஜேஷ் எடுக்க வில்லை. அத்துடன் நடிகையிடம் பேசுவதையும் அவர் தவிர்த்து வந்துள்ளார். ஒரு நாள் நேரில் சென்று ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று நடிகை கேட்டுள்ளார். அதற்கு அவர், உன்னுடன் உல்லாசமாக இருக்கத்தான். என்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி உன்னிடம் எனக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ் நாம் இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோவை காட்டி என்னை தொந்தரவு செய்தால், ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். வீடியோவை கொடுக்க வேண்டும் என்றால், 10 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று மிரட்டியுள்ளார்.

பணம் கொடுக்க மறுத்தால், உன் சினிமா வாழ்க்கையை நான் அழித்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்படி நடிகை ராதிகா தனது வீட்டிற்கு தெரியாமல் 2.50 லட்சத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தந்துவிடுகிறேன். எனக்கு அந்த வீடியோவை தந்துவிடு என்று கேட்டுள்ளார். முழு பணம் தந்தால்தான் நான் வீடியோ தருவேன் என்று ராஜேஷ் மிரட்டியுள்ளார். உடனே நடிகை இதுகுறித்து பொலிசில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு ராஜேஷ் இதுபோன்ற தவறு ஏதேனும் செய்தால் உன் மீது ஆசிட் அடித்து வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என்றும், லாரியை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும்
மிரட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ள உறவு வைத்திருந்த பெண்ணின் 16 வயது சிறுமியை கர்பமாகிய நபர்.., வெளியான திடுக்கிடும் ...

Quick Share

சென்னை கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் 16 வயது சிறுமியின் தாயார் புகார் ஒன்றை அளித்தார்.”
அதில் தன்னுடைய மகள் மூன்று மாத கர்ப்பமாக உள்ளதாக கூறினார். இதையடுத்து போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது மீனா என்பவர் மூலம் அறிமுகமான ஜேசுராஜ் (வயது 42) என்பவர் தன்னிடம் தவறாக நடந்ததாகக் கூறியிருக்கிறார். அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது பகீர் தகவல்கள் வெளியானது.

போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுமியின் அம்மாவுக்கும், மீனா (40) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் சிறுமியின் வீட்டுக்கு மீனா அடிக்கடி செல்வதுண்டு. அப்போது சிறுமியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மீனாவின் கணவர் குப்பைகளைப் பொறுக்கி, சென்னையில் பழைய இரும்புக்கடை நடத்திவரும் ஜேசுராஜிடம் விற்பதுண்டு. அந்தவகையில் ஜேசுராஜுக்கும் மீனாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் நெருங்கி பழகிய சூழலில் மீனா மூலம் ஜேசுராஜுக்கு 16 வயது சிறுமி அறிமுகமாகியிருக்கிறார். அப்போது சிறுமியை மீனா மூலம் கட்டாயப்படுத்திய ஜேசுராஜ் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தத் தகவல் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியாது. குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்தக் கொடுமை சிறுமிக்கு நடந்திருக்கிறது.

இந்தநிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து சிறுமியிடம் அவரின் அம்மா விசாரித்தபோதுதான், சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா எங்களிடம் புகாரளித்தார். அதன்பேரில் ஜேசுராஜ், அவருக்கு உதவிய மீனா என்கிற குப்பம்மாள் ஆகிய இருவரையும் கைதுசெய்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
கள்ள உறவால் நடக்கும் இது போன்ற பாலியல் சீண்டல்கள் மிகுந்த வேதனையை தருகிறது.

திருமணமான 20 நாளில் நேர்ந்த சோகம்.., 20 வயதில் கணவனை பறிகொடுத்த மனைவி

Quick Share

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய பிரபாகரன் (வயது 26). அவருடைய மனைவி கிறிஸ்டின் வனஜா மேரி (20). கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் விஜயபிரபாகரன், அவருடைய உறவினர்கள் லியோ அமலஜோசப் (25), லாரன்ஸ் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மினி லொறி, மோட்டார் சைக்கிள் மீதுநேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
“இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த லியோ அமலா ஜோசப், லாரன்ஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே லியோ அமலஜோசப் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் லாரன்ஸ், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுமாப்பிள்ளை இறந்த தகவலை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கதறி அழுதனர்.

லியோவின் குடும்பத்தாரும் அழுதார்கள். இந்த காட்சிகள் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹேண்ட்பேக்கில் சிகரெட் கஞ்சா !! பகீர் திருப்பத்தால் திசைமாறும் விசாரணை

Quick Share

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. கடந்த மாதம் 9 ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டாலும், இல்லை சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் சித்ராவின் ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, மறைந்த நடிகை சித்ராவின் ஹேண்ட் பேக் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சித்ராவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்று அவரின் மாமனார் ஏற்கெனவே போலீசாரிடம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது போதை பழக்கமும் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்தது யார்? சித்ராவின் கணவர் ஹேம்நாத்துதான் சித்ராவுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்தாரா என்பது குறித்து தற்போது விசாரணை திசைமாறியுள்ளது.

17 வயது மாணவியை உல்லாசம் அனுபவித்து வீடியோ…, நேர்ந்த கொடூரம்

Quick Share

திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இறப்பிற்கு காரணம். எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மாணவி செல்போனை கைப்பற்றி பொலிசார் ஆய்வு செய்த போது, மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது, அவர் அந்த வாலிபரை ஒதுக்கியதும், அதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், மாணவியும், தானும் ஒன்றாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்பு குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரைக் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

போதைக்கு அடிமையாக்கி கள்ள காதல்.., 35 வயது பெண் செய்த காரியம்

Quick Share

தமிழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்தவர் தியாகு (36) கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் கண்டித்துள்ளார். இருவரும் தொடர்பை கைவிடவில்லை. தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர்.

கணவரை பிரிந்த பின்னர் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்தனர், தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் குடிக்கு அடிமையாகி உள்ளனர். தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி குடிப்பதை கைவிட வில்லை. மனநலம் பாதித்தவராக மாறியுள்ளார்.தியாகு மது வாங்கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை போதைக்கு அடிமையாக்கி வாழ்க்கையை சீரழித்து கொண்ட சம்பவம் குடும்பத்திற்கு வேதனையை தந்துள்ளது.

போலீஸ் அக்கா திருட்டு வேலை..! வெளியாகும் உண்மைகள்

Quick Share

கூடங்குளம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், சக காவலர்கள் உறங்கிய பின்னர் தனது கணவரை வரவழைத்து, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிக்கொடுத்த சம்பவம்
அரங்கேறியுள்ளது.

காவல் நிலையத்திலேயே திருடுபோனா யாருகிட்ட போய் புகார் கொடுப்பாங்க ? இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை காவல் துறைக்கு எற்படுத்திய கூடங்குளம் பெண் காவலர் கிரேசியா.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அவ்வபோது திருட்டுப் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்ட தினங்களில் இரவுப் பணியில் பாராவாக இருந்தவர் இரண்டாம் நிலை பெண் காவலரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா என்பது தெரியவந்தது.

நடத்திய விசாரணையில் இரவுப் பணியில் உள்ள போலீசாரை தூங்கவைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது அமபலமானது. காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருக்கும் போது கிரேசியா, தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 இரு சக்கர வாகனங்களை திருடிக்கொடுத்தது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் இருந்து ஒரு மொபைல் போனையும் மற்றும் விசாரணை கைதியின் வெள்ளி அரைஞாண் கயிற்றையும் அவர் அபேஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் காவலர் கிரேசியா, அவரது கணவர் அன்புமணி ஆகியோர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்று இரு சக்கர வாகனங்களும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இரவுப் பணியில் உறங்கச் சென்ற காவலர்களின் பொறுப்பற்ற செயலை சாதகமாக்கிக்கொண்ட கிரேசியா போலீஸ் வேலைக்கு பதில் திருட்டு வேலையில் ஈடுபட்டதால் ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தொல்லை கொடுத்து டீச்சரை வழிமறித்து சீண்டிய மாணவன்…,

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்… இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். அந்த பேராசிரியருக்கு 29 வயதாகிறது. ராஜேஷ் எல்லை மீறி அநாகரிகமாக பேராசிரியருக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்..

பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த டீச்சரும் அமைதியாக இருந்துள்ளார். ஒருநாள் போன் செய்து, நாம ஜாலியா இருக்கலாம் என்று கூப்பிடவும்தான் அதிர்ந்து போய்விட்டார். அதனால், அந்த பேராசிரியை ராஜேஷூடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று காலேஜ் முடிந்து, பேராசிரியை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின் ராஜேஷ் சென்றார். குனிச்சி என்ற பகுதி அருகே வரும்போது, பேராசிரியரை வழி மடக்கி விட்டார். மறுபடியும் அவரை
உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார். பேராசிரியை மறுத்து விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ராஜேஷ், உன்னை இப்படியே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.நகர விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியும் உள்ளார்..

பேராசிரியை கத்தி கூச்சலிடவும், அந்த பகுதியில் சென்றவர்கள் ஒன்றுகூடி ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பேராசிரியை கந்திலி ஸ்டேஷனில் புகார் தந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர். படிக்கும் கல்லுரியில் பேராசிரியரை தவறாக அழைத்தது வேதனைக்குரிய செயலக மாறியுள்ளது.




You cannot copy content of this Website