வேலூர்

விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை..நிறைமாத கர்ப்பிணியான மனைவியின் உடலும...

Quick Share

விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் உடல் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்த ராணவ வீர‌ர் புருசோத்தமன் ஜம்மு-காஷ்மிரில் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தை ஆறுமுகம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க வந்த புருஷாத்தமன் மருத்துவமனை அருகிலே தன் மனைவியுடன் அறையெடுத்து தங்கினார்.

இந்த நிலையில், காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராத‌தால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி புருஷோத்தமனும், கட்டிலில் மனைவி அமுலும் சடமாக கிடந்தனர். இதில் அமுல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த‌து குறிப்பிடத்தக்கது.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் அவர்கள் உடலை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தந்தையை பார்க்கவந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் தங்கை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா கணவர்…ஆப்பு வைத்த காதலன்!

Quick Share

மனைவியின் தங்கை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா கணவரை கத்தியால் குத்திய காதலன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வீ. டி. பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமியின் மகள் சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருப்பதியைச் சேர்ந்த துரைபாபுவிற்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை.

கொரோனா ஊரடங்கால் துரைபாபு தனது மனைவியோடு வீ.டி. பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மூன்று மாதங்களாக தங்கியுள்ளார். துரைபாபுவிற்கு மனைவியின் தங்கை பார்வதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மனைவி சாமுண்டீஸ்வரியின் தங்கை பார்வதி (வயது 19) அருகே உள்ள பரதராமி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர் காதலித்து வந்த பூவரசன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் உள்ள பெரியோர்களும்,மாமாவும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது சம்பந்தமாக துரைபாபு பூவரசனை பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரியின் கணவர் துரைபாபு, பார்வதியிடம் உங்கள் இருவரையும் ஒன்றாக சேர விட மாட்டேன் உங்களைக் கொலை செய்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

பார்வதி பயந்து தான் காதலித்து வந்த பூவரசனியிடம் இதனை தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன் நண்பர்களுடன் சென்று துரைபாபுவை வீ.டி. பாளையத்தில் இருந்து பரதராமி வரும் வழியில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பூவரசன் வைத்திருந்த கத்தியால் துரைபாபுவை வயிற்றை நோக்கி சரமாரியாக குத்தியுள்ளார்.

மயங்கி விழுந்த துரைபாபுவை ஆபத்தான நிலையில் உறவினர்கள் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது சம்பந்தமாக பரதராமி போலீசார் துரைபாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூவரசன் மற்றும் அலெக்ஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.

மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்தி ரூ1 லட்சம் கொள்ளை – காவல் நிலையம் எதிரில் ப...

Quick Share

காவல் நிலையம் எதிரில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு 1 லட்சம் ரூபாய் மற்றும் மளிகை சாமான்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் நிலையம் எதிரில் அஃதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (70) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். வீடும் கடையும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனிவாசனுக்கு கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 5 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சீனிவாசன் வீட்டிற்க்கு சென்று,மளிகை பொருட்கள் வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்து, கடையில் உள்ள சீனிவாசன், இவரது மகன் கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் பொழுது ஸ்ரீதர் திருடன் திருடன் என கூச்சல் போடவே அந்த மர்ம கும்பல் ஸ்ரீதரின் கையை வெட்டியுள்ளனர்.

அதன்பின் தப்பிச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சசிதரன் (23) மர்ம கும்பலை பிடிக்க முயன்ற போது மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சசிதரனின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிதரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதரை, பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு லட்ச ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..

Quick Share

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் – 710 ( இன்று 26)

செங்கல்பட்டு – 10,495 ( இன்று 223)

சென்னை – 89,561 ( இன்று 1,171)

கோவை – 2,539 ( இன்று 178)

கடலூர் – 1,991 ( இன்று 71)

தர்மபுரி – 486 ( இன்று 7)

திண்டுக்கல் – 1,826 ( இன்று 99)

ஈரோடு – 518 ( இன்று 6)

கள்ளக்குறிச்சி – 2,517 ( இன்று 86)

காஞ்சிபுரம் – 5,697 ( இன்று 325)

கன்னியாகுமரி – 2,721 ( இன்று 152)

கரூர் – 296 ( இன்று 4)

கிருஷ்ணகிரி – 520 ( இன்று 69)

மதுரை – 8,705 ( இன்று 197)

நாகப்பட்டினம் – 480 ( இன்று 14)

நாமக்கல் – 395 ( இன்று 41)

நீலகிரி – 528 ( இன்று 12)

பெரம்பலூர் – 248 ( இன்று 15)

புதுக்கோட்டை – 1,186 ( இன்று 59)

ராமநாதபுரம் – 2,692 ( இன்று 88)

ராணிப்பேட்டை – 2,784 ( இன்று 414)

சேலம் – 2,560 ( இன்று 99)

சிவகங்கை – 1,760 ( இன்று 70)

தென்காசி – 1,344 ( இன்று 85)

தஞ்சாவூர் – 1,422 ( இன்று 106)

தேனி – 2,899 ( இன்று 165)

திருப்பத்தூர் – 659 ( இன்று 60)

திருவள்ளூர் – 10,210 ( இன்று 430)

திருவண்ணாமலை – 4,444 ( இன்று 210)

திருவாரூர் – 1,059 ( இன்று 45)

தூத்துக்குடி – 4,241 ( இன்று 327)

திருநெல்வேலி – 2,972 ( இன்று 120)

திருப்பூர் – 567 ( இன்று 29)

திருச்சி – 2,686 ( இன்று 213)

வேலூர் – 4,359 ( இன்று 137)

விழுப்புரம் – 2,501 ( இன்று 105)

விருதுநகர் – 4,287 ( இன்று 363)

திருமணமான பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த 23 வயது இளைஞன்!

Quick Share

தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் அறிமுகமாகியுள்ளார்.

விக்னேஷ், உதயகுமாரிடம் தான் ஒரு தொழிலதிபர், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சில நாட்களில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதை நம்பி, 12 லட்சம் ரூபாய் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன் பின் விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால், இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுக்க, தலைமறைவாக இருந்த விக்னேஷை பொலிசார் தனிப்படை அமைத்து நேற்று முன் தினம் கைது செய்தனர். கைது செய்த விக்னேஷிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். அதன்படி, பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர். இவர்களில் வசதியான பெண்களை தெரிவு செய்து, அவர்களிடம், வெளியில் சென்றபோது சிறிய விபத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

அவரமாக பணம் தேவை. உங்களிடம் இருந்தால் கொடுங்க. வீட்டுக்கு வந்து, திருப்பி கொடுத்து விடுகிறேன், என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளான். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் பறித்துள்ளான். சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவனிடம் ஏமாந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

மேலும், வெளி மாநிலங்களில் உள்ள பெண்களை சந்திக்க செல்லும்போது, டிப்டாப் உடை மற்றும் கவரிங் நகைகளை அதிகளவில் அணிந்து, விமானத்தில் செல்வது இவரது வழக்கம். ஒவ்வொறு பெண்ணிடமும் ஒவ்வொறு செல்போன் எண்ணில் பேசியுள்ளார். ஒரு பெண்ணை ஏமாற்றியதும், அந்த சிம்கார்டை தூக்கி வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சில திருமணமான பெண்கள் பொலிசாரை தொடர்பு கொண்டு, தங்கள் கணவருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் என கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால், இன்னும் வேறு என்ன? பித்தலாட்டம் எல்லாம் செய்தான் என்பது தெரியவரும்.

ஊரடங்கு நேரத்தில் நேர்ந்த அவலம்.., 15 வயது சிறுமியின் கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில...

Quick Share

இந்தியாவில் பல கிராமத்தில் மைனர் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்க விதிப்படி அரசு நிர்ணயித்த வயதைவிட குறைவானவர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என விதிகள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி 15 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சனூர் என்ற பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு தனது அவருடைய கை கால்களை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு 11 மணி அளவில் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த கொடூரம் முடிந்து காலை விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த சிறுமி அவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சம்பவம் சமூக நலத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சேமித்த பணத்தை பூமிக்கடியில் புதைத்து வைத்த தாய்: தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி!

Quick Share

மாற்றுத்திறனாளி மகளின் திருமணத்திற்காக பணம் மற்றும் நகையை புதைத்து வைத்த தாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற 52 வயது மனைவியும், விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர். தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார்.

ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி, அதோடு அரை பவுன் தங்க தோடையும் வைத்து கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு ம்ன்பு தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடாகக் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.

இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது பிளாஸ்டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர். அப்போது,அவர் அந்த பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆனால் அந்த பணம் எல்லாம் 2016-ஆம் ஆண்டிலே மத்திய அரசு தடை செய்துவிட்டதாக கூற, தாய் மற்றும் மகள் இருவருமே அந்த இடத்தில் கதறி அழுதனர்.

திடீரென உயிரிழந்த நபர்..!இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேருக்கு வந்த அதிர்ச்சி தகவல்..!

Quick Share

தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் நகை தொழிலாளி ஒருவர் இறந்து போக, அவர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத் துறையினர் கூறியதால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேர் அதிர்ச்சியடைந்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி.

சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் போகவே வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நெகடிவ் என வந்துள்ளது, இந்நிலையில் உடல்நிலை சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.இதன்படி சென்னை சென்று கொண்டிருக்கும் போதே ஆற்காடு பகுதியில் ராமமூர்த்தியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனைதொடர்ந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ராமமூர்த்தியின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் என 100 பேர் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உள்ள 99 நபர்களின் பட்டியல் வெளியிட்டது, அதில் இறந்த ராமமூர்த்தியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவித்தனர்.அப்போது ராமமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்கு வேலூர்அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதற்கு அதிகாரிகள் பட்டியலில் பெயர் உள்ளதால் கொரோனா தொற்று இருப்பது உறுதி என்றனர், இதனால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனையில் 40 வயது பெண்ணிடம் இளைஞர் செய்த சேட்டை..,செருப்பால் வெளுத்து வாங்கிய சம்...

Quick Share

சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சற்று குறைவானது. தற்போது மக்கள் தளர்வு கொடுக்கப்பட்ட ஊரடங்கை விட்டு வெளியே வர தொடங்கிவிட்டதால் பொது இடங்களில் பாலியல் சீண்டல் அதிகமாகிவிட்டது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும்.

மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே உள்ள சிகிச்சை மற்றும் செக் அப் செய்வதற்காக பலர் வந்துள்ளனர். அங்கு 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரிடம் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டு வளைத்து சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் 40 வயது பெண்ணிடம் நெருங்கி அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எரிச்சலடைந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற =இளைஞரை பிடித்துச் செருப்பால் வெளுத்து வாங்கினார். மருத்துவமனையில் இருந்த காவலரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட இளைஞரை காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. நோயாளிகள் சிகிச்சைக்காகவும், செக் அப் செய்வதற்காக வரும் நோயாளிகளிடம் இப்படி சீண்டலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.




You cannot copy content of this Website