அதிர்ச்சி! தீராத வயிற்று வலியால் துடித்த சிறுவன் – தேங்காய் அளவிலான கல்வயிற்றில்..
தேங்காய் அளவிலான கல்லை 17 வயது சிறுவனின் சிறுநீர்ப்பையில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது சிறுவன் அனாதை என்பதால் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ரூபன் ஷுக்லா என்ற 17 வயது சிறுவன் பிறக்கும் போதே Exstrophy-Epispadias Complex (EEC) என்ற விசித்திர நோயுடன் பிறந்தான்.
இந்த பிரச்சினை உடையவர்களின் சிறுநீர்ப்பையில் சிறுநீரை சேமிக்கவோ அல்லது சாதாரணமாக செயல்படவோ முடியாது.
இதன் விளைவாக அதிகமாக சிறுநீர் கசிவு ஏற்படும். இந்த EEC என்ற அரிய நிலையானது 1 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே காணப்படும். ரூபனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவர் ராஜீவ் ரெட்கர் என்பவர் சிகிச்சையளித்திருக்கிறார்.
அப்போது ரூபனின் சிறுநீர்ப்பையின் அளவை அதிகரிக்க சிறுநீர்ப்பை பெருக்குதல் மற்றும் ஒரு வடிகுழாயைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்க அவரது வயிற்றில் ஒரு குழாயை உருவாக்க மிட்ரோஃபனோஃப் செயல்முறை ஆகியவற்றை அவர் செய்திருந்தார்.
ஆனால் இதன்பின்னர் ரூபன் அவரிடம் வந்து சிகிச்சை பெறவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் ரூபனுக்கு கடுமையான வலி மற்றும் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தன்னை பராமரிக்கும் நபருடன் மருத்துவர் ராஜீவிடம் ரூபன் வந்தான். அங்கு இரண்டாவது முறையாக அவனுக்கு சிகிச்சையளித்து புதிய வாழ்க்கையை ராஜீவ் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அதன்படி மருத்துவர்கள் குழு ரூபனுக்கு அறுவை சிகிச்சை செய்து 13.4 அங்குலங்கள் கொண்ட 1 கிலோ கிராம் எடையில் உள்ள கல்லை சிறுநீர்ப்பையில் இருந்து அகற்றியுள்ளனர்.
இதன் பின்னர் அவனது வளர்ந்த சிறுநீர்ப்பையை மருத்துவர்கள் புனரமைத்தனர்.
மருத்துவர் ராஜீவ் கூறுகையில், ரூபன் அறுவை சிகிச்சைக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவரது சிறுநீரகங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன.
இது போன்ற பிரச்சினையை கொண்டவர்கள் விடாமல் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.