லைப்ஸ்டைல்

யாரை கேலி செய்தீர்களோ, அவர் வாழ்க்கையில் உங்களை விட ஒரு படி முன்னேறி இருப்பார்! புத்திய...

Quick Share

நம்மை கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் அனுபவமாகிக்கொண்டே தான் இருக்கும். அதனை உணர்ந்து கொண்டவர்கள் பிழைத்துக்கொள்கின்றனர். உணர திணறுபவர்கள், ஒவ்வொரு அடியிலும் சறுக்கலை சந்திக்கின்றனர். விட்டதை பிடிக்க ஓடி ஓடி உழைக்காமல், விட்ட இடத்தில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த அடியை எடுத்துவைத்தால், மேற்கொண்டு எதையும் இழக்க மாட்டோம். அப்படி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு செய்த சில தவறுகளின் பட்டியலை ஒரு தொகுப்பாக காணலாம்.

1. எனக்கு கோபம் வரும் என்பதை நம்மை விட பலம் குறைந்தவர்களிடமும், பய உணர்வு உண்டு என்பதை நம்மை விட வலிமையானவர்களிடம் காண்பிக்கும் பழக்கம் ரொம்ப மோசமானது.

2. எப்போதும் யாராவது முதல் அடி எடுத்து வைக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு, அவர்கள் பின்னால் போவது என்னைக்கும் வெற்றியை கொடுக்காது. ஒருவர் உருவாக்கிய பாதையில் பின்னால் போனால், அவர் கண்ட கனவு பலிக்குமே தவிர, உங்கள் கனவு எப்படி நிறைவேறும்?

3. பிறர் என்ன நினைப்பார் என்பதை நினைத்து நினைத்து, தான் மனதில் நினைத்ததை கடைசி வரைக்கும் நிறைவேற்றாமல் பிறரை கண்டு மனம் நொந்தே காலத்தை ஓட்டுவது ரொம்ப கஷ்டம்.

4. அரசாங்கத்தை குறை கூறுவோம். அடுத்த நிமிடமே ரேஷனில் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் முதல் ஆளாக கியூவில் நிற்போம். யாரும் ஆரோக்கியமான விமர்சனங்கள் செய்ய முயற்சி செய்வதில்லை. 

5. நீங்கள் யாரை கீழ்த்தரமாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவரால் உங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் மாற்றம் வரலாம்.

6. பணத்தை அளவுக்கு மீறி சேமித்துவிட்டு, ஒரு நாள் நினைவுகள் சேமிக்கவில்லையே என வருத்தப்படுவீர்கள். இருக்கும் போதே வாழ்ந்துவிடுவது நல்லது.

7. மனசுதான் முக்கியம் என்று சொல்லும் திருமணங்களில் முதலில் கேட்கப்படுவது, ஜாதகம் இருக்கா? என்பதே! வாய் வார்த்தைகளை வைத்து என்றைக்கும் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

8. தோற்றத்தை வைத்து, இவனெல்லாம் எங்க உருப்படப்போறான்? என்று நினைக்கும் நபர், ஒரு நாள் உங்களைவிட, ஒரு படி உயர்ந்த நிலையில் இருப்பார்.

9. ரொம்ப பாசம் காட்டுகிறேன் என்ற பெயரில், தொல்லையாக மாறுவது கூட குற்றமே. மீன் பிடிக்க சொல்லிக்கொடுக்கலாம். மீனை ஊட்டி விடுகிறேன் என்று வாயில் திணித்தால், முள் தொண்டையில் குத்தும்.

10. அடுத்தவர் செய்யும் தப்பை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்கும் நமது கண்கள், நாம் தப்பு செய்யும் போது, ஏதாவது ஒரு காரணத்தை நினைத்து மனதை தேற்றிக்கொள்ளும். 

பத்திரம் இருக்கு, பட்டா இருக்கு! இரண்டுமே உள்ள புறம்போக்கு நிலத்தை வாங்கலாமா? என்ன மாதி...

Quick Share

இந்த மாதிரியான நிலங்களை வாங்க வேண்டும் என்றால், 30 வருடங்களுக்கு அந்த நிலத்தின் மீதுள்ள வில்லங்கத்தை சரி பார்க்க வேண்டும். புறம்போக்கு நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டா என்றால், அந்த நிலம் மார்க்கெட் விலையை விட குறைவாகவே மதிப்பிடப்படும். பட்டா, பத்திரம் இருந்தும் அது புறம்போக்கு நிலம் என்றால், எந்த வகையில் புறம்போக்கு நிலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அரசு தானமாக வழங்கிய நிலமாக இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு அதனை விற்க கூடாது என்ற விதி இருக்கிறது. இந்த மாதிரி நிலத்தை வாங்கும் முன், எல்லா வகையிலும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

பத்திரம் மற்றும் பட்டா வழங்கப்பட்ட நிலமென்றால் வில்லங்கம் பார்த்து வாங்கலாம். நத்தம் புறம்போக்கென்றால் யாரும் ஆட்சேபனை செய்யமுடியாது. பத்து வருடங்கள் ஒருவர் வீடுகட்டி குடிஇருந்து வருகிறார் என்றால் அவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று அரசு ஆணை இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நத்தம் என்றால் வில்லங்க நகல் சரிபார்த்து வாங்கலாம். நத்தம் நிலங்களுக்கு முதல் ஆவணமே பட்டாதான். அதுவும் வருவாய்த் துறையால் நேரடியாக வழங்கப்படுகின்றது. பட்டா பெற்று நீண்ட நாட்களாய் ஆகிவிட்டதென்றாலும் ஆவணத்துடனே அதன் நகலும் இருக்கும்.

1988 ஆம் ஆண்டு முதல் புறம்போக்கு நிலங்களை முறைப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதில் முழுமையாக தீர்வு காணப்படாத சிக்கல் நிறைந்த இடங்களுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டது. முறைப்படி எல்லாமே பக்காவா இருக்கும் நிலங்களுக்கு கிளியர் பட்டா வழங்கப்பட்டது. வாங்கப்போகும் நிலத்திற்கு எந்த வகை பட்டா இருக்கிறது என்பதை சரிபார்க்க வேண்டும். தோராய பட்டா இருக்கும் நிலத்தில் குடியிருப்பவர்களை அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்ற முடியும்.

தோராய பட்டவின் வழியாகத்தான் நிரந்தப் பட்டா வழங்கப்படுகின்றது. ஆகவே பத்திரப்பதிவிற்கு முன்னதாக நிலத்தின் தன்மை என்ன என்று சரிபாருங்கள். உதாரணமாக மேய்சல் புறம்போக்கு, பாசனப் புறம்போக்கு,ஏரிப்புறம்போக்கு இப்படி பலவகையான நிலங்கள் உள்ளன.புறம்போக்கு நிலங்களில் பல வகைகள் உண்டு. அதனை இன்றைய மார்க்கெட் விலைக்கு வாங்க வேண்டுமா என சிந்தியுங்கள்.வில்லங்கம் இருந்தால் பின்னாடி அலைய வேண்டி இருக்கும். 

அந்த மாதிரியான படம் பார்த்து கொண்டே, சு ய இன்பம் செய்வது சரியா?

Quick Share

லாக்டவுன் நேரத்தில் அந்த மாதிரியான படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. வேலை இல்லாமல் இருக்கும் போது இது போன்ற வேலையில் இறங்குகிறார்களாம். வெறுமனே படம் பார்ப்பதோடு இந்த வேலை நிற்பதில்லை. படம் பார்த்து கொண்டே சு ய இன்பம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக பா லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன வி ளைவு என்றால், படம் பார்த்து சு யஇன்பம் செய்தால் தான், அடுத்த வேலையே நடக்கும் என்ற மனப்பாங்கிற்கு வந்து விடுகின்றனர்.

எப்படி காலையில் காபி குடிப்பது விட முடியாத பழக்கமாகிவிட்டதோ அதேபோல, அந்த மாதிரியான படம் பார்த்து சு யஇன்பம் செய்தால் தான் அந்த நாளே நகரும் என சொல்லும் அளவிற்கு அதற்கு அடிக்ட் ஆகிவிடுகிறார்கள். அப்படியானால் அந்த மாதிரியான படம் பார்த்து சு யஇன்பம் செய்வது தவறா என்றால், வாரம் ஒருமுறை அல்லது சில தினங்களுக்கு ஒருமுறை என்றால் சரி. ஆனால் தினமும் அதை செய்தால் தான் அந்த நாளே நகரும் என்பது தவறு.

இது எந்த நிலைக்கு கொண்டு போய்விடும் என்றால், தினமும் ஒரு முறை செய்தால் பத்தாது என்ற நிலை மாறி, தினமும் காலையில் ஒருமுறை, டீ ப்ரேக், லன்ச் ப்ரேக், என கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போ னோகிராஃபி பார்த்துகொண்டே செய்தால் தான் மனது திருப்தி அடையும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்களாம். இவர்கள் உடனடியாக மருத்துவரை பார்க்காவிடின் கண்டிப்பாக உ டல் ரீதியாக மட்டுமின்றி ம னரீதியாகவும் பா திக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவ்வாறே பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட பதிவு முழுக்க முழுக்க பா லியல் நிபுணர்களின் கருத்து.

பாரம்பரியம் அறிவோம்!உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள்!

Quick Share

இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி? இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் “மதுரை”. மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்? அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.

சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை”

என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம். கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.

நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.? உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.

நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை. சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.

மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40×3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே “வடக்கிருந்து”(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.

பாரம்பரியம் அறிவோம்!

புராதான உணவுகளை உண்போம்!

வாழ்வதற்காக உண்!

உண்பதற்காக வாழாதே!

உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.

சரித்திரங்களை விதையுங்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். “மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! ” அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ்வான்.

உடல்நிலை சரியில்லாத போது காபி அருந்துவது நல்லதா?..

Quick Share

பொதுவாகவே பலருக்கு காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடித்தால்தான் அன்றையே வேலையே ஓடும்.இன்னும் சிலர் பல் கூட விளக்காமல் பெட் காஃபி குடித்த பின்பு எழுபவர்களும் உண்டு. அலுவலகத்தில் வெளியில் அல்லது ஏதாவது நண்பர்கள் உறவினர்கள் சந்திப்பு, விருந்தோம்பல் இப்படி எதுவென்றாலும் என்றாலும் காஃபியே பிரதான இடம் பெறுகிறது. அதில் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் காபி குடிப்பது நல்லதா என்பது பற்றி தான் இதில் பார்க்கப் போகிறோம்.

அப்படி எல்லா இடத்திலும் எந்த நாளிலும் வெகுவாக விரும்பி அருந்துகிற காஃபின் பூர்வீகம் இந்தியா கிடயாது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவாகாஃபியின் பூர்விகம் எத்தியோப்பியா எனப்படுகிறது.அங்கு கால்டி என்பவர் ஆடு மேஉத்துக் கொண்டிருந்த பொழுது காபி இலைகளை உண்ட ஆடுகள் உற்சாகத்தில் துள்ளி ஓடியதைக் கண்டு காபியைக் கண்டுபிடித்தாராம்.இந்தியாவில் முதன்முதலாக பாபா புதின் என்பவர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று வரும் பொழுது 7 காஃபி கொட்டைகளை தாடியில் மறைத்துக் கொண்டு வந்து பியிரிட்டார் என்று வரலாறு சொல்கிறது.அன்றிலிருந்துதான் நமக்கும் காஃபின் உற்சாகம் தொற்றியிருக்க கூடும்.

​காபி

உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காபி ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவது பில்டர் காஃபிதான். அதுவும் தமிழகத்தில் கும்பகோணம் பில்டர் காஃபிக்கென்றே தனி அடையாளம் உண்டு.

அதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் அதில் இருக்கும் காஃபைன் என்னும் ஒரு வேதிப்பொருள்தான்.இதுவே குடித்ததும் சட்டென தோன்றும் ஒரு உற்சாகத்திற்கு காரணம்.இந்த காஃபின் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடையை சீராக பராமாரிக்க உதவுகிறது.

​என்ன மாற்றங்கள்

காஃபி குடிப்பது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது. கருவுறும் திறன் 175 சதவீதம் அதிகரிப்பதாக இதற்கென நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மலச்சிக்கலை குறைத்து செரிமானத்தை ஊக்குவிக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

அளவாக காஃபி அருந்துபவர்களுக்கு பெரிதாக எதுவும் பாதிப்பு வருவதில்லை என்றாலும் உணவுக்கு பதில் காஃபியையே ஒரு கப் அருந்துபவர்கள் கூட உண்டு.நல்ல உடல் நிலையில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 400 மில்லி கிராமிற்கும் குறைவான காஃபின் உட்கொள்ளும்போது அது எவ்வித ஆரோக்கிய கேடுகளையும் உண்டாக்காது என சொல்லப்படுகிறது.பிறகு எவ்வளவு காஃபி குடிக்க வேண்டும் என சிலருக்கு சந்தேகம் தோன்றலாம்.ஒருநாளைக்கு 4 கப் வரைக்கும் அருந்துபவர்களுக்கு எந்த விதமான பின் விளைவுகளும் தோன்றுவதில்லை.

​பக்க விளைவுகள்

உடல்நலம் எவ்வித குறைபாடும் இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு காஃபி குடிப்பதில் சில பக்க விளைவுகள் உண்டென்றாலும் அதிலும் சில ஆண்டி ஆக்சிடெண்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் தன்மைகளும் உண்டு.ஆனால் அதுவே அளவிற்கு மீறி செல்லும்போது அதிகமான பக்க விளைவுகளை உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதுவே உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் காஃபி எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை இன்னும் அதிகரிக்ககூடும் எனவும் எச்சரிக்கின்றனர். அதுவும் நீங்கள் என்னவிதமான உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்து விளைவுகள் இன்னும் அதிகரிக்கலாம் அல்லது எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் தன்மை கூட வேறுபட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

​உடல் நலமின்மை

உடல் நலமின்றி சோர்வுற்று இருக்கும்போது ஒரு கப் காஃபி எடுத்துக் கொள்வது சற்று புத்துணர்ச்சி தரக் கூடியதாக இருக்கலாம்.இன்னும் சிலருக்கு காஃபி எடுத்துக் கொண்டால்தான் காலைக் கடன்களைக் கழிக்கவே முடியுமென்கிற நிலை இருக்கும்.

எனவேதான் உடல்நிலை சரியில்லாத நிலையில் உடனே காஃபி குடித்தாக வேண்டுமென்கிற உணர்வை தோற்றுவிக்கிறது.தலைவலி,சளி போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு காஃபி குடித்து முடித்ததும் உடனே ஒரு இன்ஸ்டண்ட் உற்சாகம் பிறந்து விட்டது போலவும் தலைவலி பறந்து விட்டது போலவும் ஒரு உணர்வைத் தோற்றுவிக்கிறது. ஆனால் இது எல்லாம் உண்மையிலேயே சரிதானா

உயர் ரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு காஃபி அருந்துவது இரத்த அழுத்தத்தை மேலும் உயர்த வழி வகை செய்யும்.ஒரு ஆராச்சியில் உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் சிலருக்கு சுமார் 250 மில்லி கிராம் காஃபி வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரையில் உயர் இரத்த அழத்தம் எற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

​பசியின்மை

அதேபோன்று ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து உட்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் போது குடிக்கும் காபியானது தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும். வேறு சில மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது செரிமான சக்தியைக் குறைத்து அஜீரணத்தை உருவாக்ககூடும். எனவே நீங்கள் சில குறிப்பிட்ட வியாதிக்கான சிறப்பு மருந்துகள் அல்லது பத்தியம் இருக்க நேரிடுகின்ற நிலையில் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்து கொண்டே பிறகே காபி அருந்துவது நல்லது. குடற்புண் அல்லது அல்சர் இருப்பவர்கள் கட்டாயம் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அருந்தியவுடன் சற்று நேரத்திற்கு அதி உற்சாகம் பிறந்தது போல தோன்றினாலும் பசியின்மையை தூண்டி உடல் பித்தத்தை அதிகரிக்கும்.

புற்றுநோய் அபாயம்

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் அதற்கென தனியாக மாத்திரைகள் உட்கொண்டு வருவர்களும் காபியை அறவே தவிர்ப்பது நல்லது.இது நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்ககூடும். இதய படபடப்பு உள்ளவர்களும் முற்றிலும் தவிர்த்து விடுவதே சாலச் சிறந்ததாகும். ஏற்கெனவே உள்ள நோயின் தன்மையைப் பொறுத்து சில குறீப்பிட்ட மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு வருபவர்கள் காபியை தொடர்ந்து எடுத்துக் கொள்வது கணையம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

​​அழற்சி

சிலருக்கு காஃபி குடிப்பதால் ஒவ்வாமை ஏற்படக்கூடும். படபடப்பு, பதற்றம் தூக்கமின்மை, ப்ரஸ்டேட் மற்றும் வயிற்றில் கோளாது போன்ற உபாதைகளும் ஏற்படலாம். அதுபோன்ற அறிகுறிகள் இருந்து அல்லது அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் சில நாட்களுக்கு காஃபியை விலக்கி வைத்திருப்பது ஒருவேளை காஃபியால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

காஃபி அருந்துவர்களில் பெரும்பாலனவர்கள் மிகுந்த கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்பவராகவும், புகைப் பழக்கமுள்ளவர்களாகவும், முறையாக உடற்பயிற்சி செய்வதில் குறைந்தவர்களாகவும் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. எனவே இன்னொரு முறை காஃபி அருந்தும் முன் சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

​ஆராய்ச்சியும் விவாதங்களும்

உலக ஆராய்ச்சியாளர்களிடையே காஃபி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.காஃபி குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற கோளாறுகளில் தொடங்கி விரைவில் உடல்நலத்தையே கெடுத்து விடும் என ஒரு சாரரும் இல்லையில்லை காஃபி குடிப்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தி ஆயுளையே அதிகரிக்கச் செய்து விடும் என ஓரு சாரரும் வாதிடுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் எதிலும் அளவோடு இருப்பதே நலமோடு வாழ வழி செய்யும். காஃபியை அதிகமாக அருந்தும் பழக்கமுடையவர்கள் மெதுவாக குறைக்க முயற்சி செய்து வரலாம்.அதிலும் உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில் முற்றிலும் தவிர்த்து விடுவதே உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்?.. இதை படியுங்கள்!..

Quick Share

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா. கண்டிப்பாக கிடையாது நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் அமைதியாக நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரம் இல்லை. கைக்கு கிடைத்ததை வாய்க்கு போட்டு விட்டு ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

உடல் நலன் பாதிப்பு

இளம் வயதிலேயே உடல் பருமன், விட்டமின் பற்றாக்குறை, போதிய சீரணமின்மை, வாய்வுத் தொல்லை, வயிறு பிரச்சனைகள் இன்றும் நிறைய பிரச்சனை களை அடுக்கிக் கொண்டே போகலாம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அவசர அவசரமாக எதாவது ஒரு வேலையை செய்தால் அது சரியாக நடைபெறுமா கண்டிப்பாக நடக்காது. அது மாதிரி தான் நீங்கள் சாப்பிடும் சாப்பாடும். வேக வேகமாக சாதத்தை உள்ளே தள்ளினால் என்னாகும் மூளைக்கும் நம் செரிமான உறுப்புக்கும் என்ன புரியும். உணவு ஒழுங்காக சீரணிக்குமா கண்டிப்பாக கஷ்டம் தான்.

இதை விஞ்ஞான ரீதியாக கூட நிரூபித்து உள்ளனர். வேகமாக சாப்பிடுவது ஒரு நபரின் மன, உணர்ச்சி மற்றும் உடல் நலனில் பல சிக்கல்களை உருவாக்கும் எனவும் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வேகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகின்றன, எப்படி சரியான முறையில் சாப்பிட வேண்டும் என்பதை தெரிஞ்சுக்கலாம். கொழுப்பு சாப்பிடுவது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும் நீங்கள் உணவுகளை மென்று சாப்பிடாமல் விழுங்கும் போது சீரண உறுப்புகள் அதை உடைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இதனால் உங்களுக்கு செரிமான சிக்கல்கள் உண்டாகும். எனவே சாப்பிடும் போது பற்களால் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

​உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளது

உணவை செரிப்பது என்பது ஒரு தொடர்ச்சியான வேலை. நமது உமிழ்நீர் உணவை எளிமையான சர்க்கரைகளாக உடைக்க உதவுகிறது. பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவை செரிக்க உதவுகின்றன ஆனால் நீங்கள் நன்றாக மென்று சாப்பிடாத போது உணவை செரிப்பது பெரிய வேலையாக மாறுகிறது. இதனால் அதிகளவு அமிலம் சுரக்கிறது. அதிகளவு அமில சுரப்பதால் நம்மளுக்கு பசியும் அதிகரிக்கிறது. இதனாலயே தேவையில்லாமல் சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. உங்க உடல் மெட்டாபாலிசமும் குறைவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

​​மூளை சிக்னல்கள் சரியாக இருப்பதில்லை

நமக்கு ஏற்படும் பசி, சீரணம் எல்லாவற்றிற்கும் மூளை சிக்னல்கள் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பி விட்டது என்ற திருப்திகரமான சிக்னலை பெற மூளைக்கு 20 நிமிடங்கள் ஆகின்றன. எனவே உணவை நீங்கள் மெதுவாக மென்று சாப்பிடும் போது மூளைக்கு சரியான நேரத்தில் சிக்னல் செல்லும். வயிறு நிரம்பி விட்டது என்ற சிக்னலை பெற்ற உடன் மூளை பசியை தணித்து சாப்பிடுவதை நிறுத்த சொல்லும். இதுவே நீங்கள் அவசர அவசரமாக சாப்பிடும் போது மூளைக்கு தகவல்கள் செல்லாமல் நிறைய சாப்பிட வாய்ப்புள்ளது. இதனாலும் உங்க எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

​​இதய பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் உண்டாகிறது

சரியாக சாப்பிடும் பழக்கம் இல்லாததால் ஏற்படும் உடல் எடையால் இதய பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். சரியாக மென்று சாப்பிடாத போது சுரக்கும் அதிக அமிலம் உங்களுக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்க வாய்ப்புள்ளது.

டயாபெட்டீஸ் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது

வேகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பு மட்டுமல்லாது டயாபெட்டீஸ் பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது. இதனால் உங்க இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல் போய் விட வாய்ப்புள்ளது.

​உணவை சரியான முறையில் எப்படி சாப்பிடுவது

முதலில் நீங்கள் கடிக்கும் அளவை கவனியுங்கள். உணவின் ஒரு கடியானது உங்க ஆள்காட்டி விரல் நுனியில் இருந்து நடுத்தர கோடு வரையிலான அளவாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடித்து மெதுவாக சாப்பிட வேண்டும். உணவை விழுங்குவதற்கு முன் 15 – 20 முறை மெல்ல வேண்டுமாம். அப்பொழுது தான் உணவு சிறிய துண்டுகளாக உடைக்கப்படும். உணவு வாயிலயே சிறிய துண்டுகளாக உடைக்கப்படுவதால் உங்க செரிமான உறுப்புகளுக்கு எளிதாக இருக்கும்.

​கொஞ்சம் தண்ணீர் அருந்துங்கள்

சாப்பிடுவதற்கு முன் 2-3 மடக்கு தண்ணீர் அருந்துவது உங்க வாய் மற்றும் உணவுக்குழாயை உயிர்வூட்டுவதோடு உணவை வேகமாகவும் சுலபமாகவும் பேஸ்ட்டாக மாற்ற உதவும். அதே மாதிரி உமிழ்நீர் சுரப்பிற்கும் உதவி செய்யும். இருப்பினும் சாப்பிட்ட உடனே தண்ணீரை குடிக்க வேண்டாம். இது உங்க வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை மந்தப்படுத்தி விடும். இதனால் உணவு சரியாக செரிக்காது. எனவே 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கூட சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் காத்திருங்கள்.

​​கவனமாக சாப்பிடுங்கள்

சாப்பிடும் போது மெல்லுவதுடன் அந்த உணவில் உங்க முழுமனதும் இருக்க வேண்டும். உணவில் கவனம் இருக்க வேண்டும். டீவி பார்த்து கொண்டோ மொபைல் பார்த்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவின் ருசியை ருசிக்க, முகர வேண்டும். அப்பொழுது தான் உங்க மனதிற்கும் மூளைக்கும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே கவனச் சிதறல் களை தவிர்த்து உணவை சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

​​மனப்பூர்வமான சாப்பாடு

மனப்பூர்வமான சாப்பாடு தான் உங்களுக்கு ஆரோக்கியமான சாப்பாடும் கூட. ஆரோக்கியமான எளிதாக சீரணிக்க கூடிய உணவுகளை தேர்ந்தெடுங்கள். முடிந்த வரை துரித உணவுகளை தவிர்த்து நன்றாக மென்று ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிடுங்கள். அப்பொழுது தான் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்டும். உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை குடல் உறிஞ்சும். எளிதில் சீரணம் செய்ய முடியும். உங்க குடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட கூடாதாம்!..

Quick Share

அவ்வபோது வேண்டியதை மட்டும் சமைத்து சாப்பிடும் காலத்தை கடந்துவிட்டோம். சமைக்கும் உணவு பதார்த்தங்கள் நாள்கணக்கில், வாரக்கணக்கில் கெட்டுபோகாமல் காப்பாற்ற எல்லோரு வீட்டிலும் அத்தியாவசிய பொருளான ஃப்ரிட்ஜ் இருக்கிறது. அவ்வபோது அதை பதமாக சூடு செய்ய அதற்கு தோதாக மைக்ரோவேவ் அவன் இருக்கிறது. இதனால் இரண்டு வேளை என்ன மூன்று வேளை சமையலை ஒரே நேரத்தில் முடித்துவிடுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காலையில் சமைத்துவிட்டால் பிறகு சூடுபடுத்தி சாப்பிட்டுகொள்ளவேண்டியதுதான் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இதையும் தெரிந்துகொள்ள வேண்டும். சத்து தரும் பொருள்களாக இருந்தாலும் அதை மீண்டும் சூடுபடுத்தும் போது அவை சத்தை இழந்து நஞ்சாகவே மாறுகிறது. அப்படி சூடுபடுத்த கூடாத உணவு பொருள்கள் என்னென்ன? தெரிந்துகொள்வோம்.

சாதம்

ஏன் இதை முதலாவதாக கொடுத்திருக்கிறோம் என்றால் நம் அன்றாட உணவில் இவை தான் பிரதானமாக இருக்கிறது. காலை ஒரு வேளை சாதத்தை வைத்துவிட்டால் மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் அதை சூடு செய்து கொள்ளலாம் என்று நினைப்போம். ஆனால் சாதம் வடித்த பிறகு மீண்டும் நீங்கள் அதை சூடுபடுத்தி உண்பதன் மூலம் அதன் சத்துக்கள் இழக்கப்படும்.

சிலர் பிரியாணி, கலந்த சாதங்கள் அதிகமாக இருக்கும் போது ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள் இவற்றில் நிச்சயம் நச்சுத்தன்மை மிகுந்திருக்கும். குறிப்பாக அசைவம் கலந்த பிரியாணியில்.

கீரைகள்

கீரை உடலுக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து தரக்கூடியது. ஆனால் இதை சமைத்த பிறகு மீண்டும் சூடு செய்து பயன்படுத்தும் போது இந்த இரும்புச்சத்து ஆபத்து தரும் நஞ்சை உருவாக்குகிறது. அதே போன்று கீரையில் இருக்கும் நைட்ரேட் ஆனது கீரையை சூடு செய்யும் போது நைட்ரைட்டாக மாறுகிறது. இவை புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளில் ஒன்று. குறிப்பாக குடல் புற்றுநோயை உண்டாக்க கூடும். மேலும் இரவு நேரங்களில் கீரையை சாப்பிடும் போது அவை செரிமானக்கோளாறுகளை உண்டாக்கி விடவும் வாய்ப்புண்டு. கீரையை மதிய வேளையில் மட்டும் சாப்பிடவேண்டும். எந்த கீரையாக இருந்தாலும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது.

சமையல் எண்ணெய்

சமைக்கும் போது பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளே தற்போது ஆபத்தை விளைவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் எண்ணெய் பயன்படுத்தி பொரித்த பிறகு எஞ்சியிருக்கும் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும் போது எண்ணெயின் அடர்த்தி அதிகரிக்க தொடங்கும். இவைதான் இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்க காரணங்களாக அமைந்துவிடுகிறது. அப்படியெனில் பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை என்ன செய்வது என்கிறீர்களா குறைந்த அளவு பயன்படுத்தி பொரித்தெடுங்கள். அப்படி எஞ்சியிருக்கும் எண்ணெயையும் 5 நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். பொதுவாக எண்ணெயை அதிகம் சூட்டுக்கு உள்ளாக்காமல் சமைப்பதே சிறந்தது.

உருளைக்கிழங்கு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு பொருள் இது. பலரும் மொத்தமாக ஒரு வாரத்துக்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை வேகவைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துவிடுவார்கள். அவ்வபோது இதை பொரித்து, வறுவலாக்கி, புட்டு செய்து விடுவார்கள். உருளைக்கிழங்கில் வைட்டமின் பி 6, சி மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளது.

உருளைக்கிழங்கை சமைத்தபிறகு அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் மீண்டும் சூடு செய்யும் போது அவை க்ளோஸ்ட்ரிடியம் போட்டுலினியம் என்னும் நஞ்சை உருவாக்குகின்றன. இதன் காரணமாக உடல் நல குறைபாடு, ஒவ்வாமை உணர்வு தலைதூக்கும். உருளைக்கிழங்கு போன்றே இதர கிழங்கு வகைகளையும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடகூடாது.

​புரதம் நிறைந்த கோழி இறைச்சி

புரதச்சத்து தேவை எனில் கோழி இறைச்சியை எடுத்துகொள்ள வேண்டும். புரதங்கள் செரிமானத்தை தாமதாக்கும் என்னும் போது இதை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட்டால் செரிமானசிக்கலை நிச்சயம் உண்டு செய்யும்.

கோழி இறைச்சியை முதல் நாள் சமைத்து மீண்டும் மறுநாள் சூடு செய்யும் போது அதிலிருக்கும் புரதமானது மாறுகிறது.இவை ஃபுட் பாய்ஸனாக மாறி உடலை பதம் பார்க்கும். கோழி இறைச்சியை சமைக்காமல் வைத்திருந்தால் ஈகோலி மாதிரியான பாக்டீரியாக்கள் உருவாகும். அதே போன்று நன்றாக சமைக்காவிட்டாலும் இந்த பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிடும். நன்றாக சமைத்த கோழி இறைச்சியை மீண்டும் சூடு படுத்தினாலும் அவை உடல் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும்.

முட்டை

சாதாரணமாக் செரிமானக்கோளாறு உள்ளவர்களுக்கு முட்டை அலர்ஜி. அப்படி இருக்கும் போது புரதச்சத்து நிறைந்த முட்டையை வேக வைத்து, பொரித்து அவை மீதமிருக்கும் போது மீண்டும் சூடுபடுத்தினால் அவை விஷமாகத்தான் மாறும்.

புரதச்சத்து நிறைந்த முட்டை மீண்டும் வெப்பநிலைக்கு ஆளாகும் போது அதிலிருக்கும் நைட்ரஜன் தீங்கு விளைவிக்கும் நச்சை வெளியேற்றும். செரிமானக்கோளாறை அதிகப்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறை உண்டாக்கும். அதனால் முட்டையை எப்போதும் சூடுபடுத்தி சாப்பிடவேண்டும்.

காளான்

அப்போதே சமைத்து உடனடியாக சாப்பிடகூடிய பொருளில் காளானும் ஒன்று. காளானிலும் புரதம் அதிகம் உள்ளது. இதை முழுமையாக பெற உடனே சாப்பிடவேண்டும். இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமானக்கோளாறுகள் உருவாவதோடு வயிறு உபாதைகளையும் உண்டாக்கும். காளானை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சமைப்பவர்கள் உடனடியாக சமைக்காமல் இரண்டு மணி நேரம் வெளியே வைத்து பிறகு சமைக்க வேண்டும்.

பீட்ரூட்

காய்கறிவகைகளில் பீட்ரூட் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 ,ஃபோலேட் சத்துகளை கொண்டிருக்கிறது. ரத்த அணுக்களின் அளவு சீராக இருக்க பீட்ரூட் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.

பீட்ரூட்டை சமைத்து மீண்டும் சூடுபடுத்தும் போது இதில் இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு நஞ்சை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் காய்கறிகளில் பீட்ரூட்டையும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தகூடாது.

​காபி மற்றும் டீ

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மொத்தமாக டீயோ காபியோ போட்டுவிட்டு தேவைப்படும் போது சூடேற்றி கொடுப்பது சுவையை மாற்றிவிடும். சமயத்தில் வயிற்றுப்போக்கையும் உண்டாக்கிவிடும். மாறாக பிளாஸ்க்கில் ஊற்றிவைக்கலாம். அல்லது டிகாஷனையும் பாலையும் தனியாக வைத்து வேண்டியபோது சூடாக்கி கலந்து கொடுக்கலாம்.

கறியும் முட்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது… ஏன் தெரியுமா?

பொதுவாக உணவை அவ்வபோது சமைத்து சூடாக சாப்பிடுவதுதான் நல்லது. குறிப்பாக மேற்கண்ட உணவுகளை எப்போதும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது. இனி சமைக்கும் போது இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் பார்வை திறனை மேம்படுத்த உதவும் முக்கிய உணவுகள்!

Quick Share

உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் உங்கள் குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கான உணவுகளை நீங்கள் தருகிறீர்களா என்று உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். அப்படிச் செய்தால், அனேக கண் பார்வை பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு, உங்கள் குழந்தைகள் பெரியவர்களானாலும் நல்ல ஆரோக்கியமான பார்வையோடு இருப்பார்கள். நீங்கள் தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைக்குச் சத்தான உணவைத் தரவும், இங்கே சில உணவுகளின் பட்டியல் உங்களுக்காக…

1. நாவல்பழம் மற்றும் திராட்சைப்பழம்

நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும்,இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும்.ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது.மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.

2. மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும்.கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.குறிப்பாக சால்மன்,டுனா,மேக்கிரல்,ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.

3. கீரை வகைகள்

பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை,பசலை,புதினா,பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

4. ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள்

மாம்பழம், ஆரஞ்சு, காரட்,எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும்.தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

5. சூரிய காந்தி விதைகள்

இதில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன.இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன.வாங்கி பலன் அடையலாம்.

6. முட்டை

முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது.முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்தின்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

7. முட்டைகோஸ்

கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் உயிர்ச்சத்து சி மற்றும் உயிர்ச்சத்து இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

8. பூக்கோசு

இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது.ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் பூக்கோசை விரும்பி உண்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு

இதில் பீடாகரோடின் மற்றும் ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளன.இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.

10. பால் பொருட்கள்

பால்,வெண்ணெய்,தயிர்,நெய்,பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது.இவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

11. தண்ணீர்

தண்ணீர் என்பது வளமான கண் பார்வைக்கு இன்றியமையாதது.பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம்.இதைத் தவிர்க்க போதிய தண்ணீர் அருந்த வேண்டும். அதாவது தினம் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உகந்தது.

12.கொட்டை மற்றும் பருப்பு வகைகள்

முந்திரி, பாதாம் போன்ற சில கொட்டை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து இ சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். பட்டாணி,மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் ஜிங்க் நிறைந்து உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த உணவுகள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு மற்ற உணவு வகைகளையும் அதிகம் கொடுக்கலாம். நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி, ஆற்று மீன்கள் என்று நல்ல சத்து நிறைந்த உணவைத் தரலாம். மேலும் பசும் பால், பாரம்பரிய அரிசி வகைகள், உதாரணத்திற்குக் குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கைக்குத்தல் அரிசி என்று பல வகை அரிசி வகைகளையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பாரம்பரிய பருப்பு மற்றும் அரிசி வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தது.

ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு முன் ஏன் 8 போட சொல்கிறார்கள்?

Quick Share

எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ’ன்னு, ரஜினி பாடினாரில்லையா? அதிலிருந்தே தெரிந்திருக்க வேண்டும், எட்டுக்கு எவ்வளவு பவர் இருக்கிறதென்று. காலை மாலை நடக்கும் போது, முடிந்த அளவுக்கு பெரிய எட்டு போடுவது போல, சில சுற்றுகள் நடப்பது உடலுக்கும், கால்களுக்கும் வலிமை தரும் என்கிறார்கள். எங்கள் பள்ளி மைதானத்தில் பல பேர் அப்படி நடப்பது உண்டு. அதிலும் இட- வல திசையில் அமையும் சரியான, சீரான திருப்பங்களே கால் தசைகளுக்கு மிகத்தேவையான பயிற்சியைத் தருகின்றன.

தலைப்புக்கும் இப்போ சொன்னதுக்கும் சம்பந்தமே இல்லையே! என்ற ஃபீல் வரலாம். கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டு போவோம் பாஸ். பொறுமையா போலாமே! இருசக்கர வாகனத்துக்கு லைசென்ஸ் வாங்க செல்லும் போது ஏன் எட்டு போடச்செல்கிறார்கள் என்றால், ஒன்றிலிருந்து ஒன்பது வரைக்கும் எடுத்துக்கொண்டால், எட்டைத் தவிர மற்ற எல்லா எண்களுக்கும் ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் கட்டாயம் இருக்கும். ஆனால் எட்டு மட்டும் பாருங்கள், இடைவிடாது தொடர்ந்து போட்டுக்கொண்டே இருக்க ஏதுவான வடிவம்.

எட்டு வடிவத்தில் ஒவ்வொரு வளைவுகளும் ஒரே சீராக இருப்பதால், வண்டி ஓட்டிக்காண்பிக்கும் போது கால்களை தரையில் வைக்காமல், வாகனங்களை இயக்க முடியும். எட்டு வடிவத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது வலப்பக்கம் திரும்புவது, இடப்பக்கம் திரும்புவது, குறுக்கே திரும்புவது, அகலமான யூ-டர்ன் ஆகியவற்றை கடப்பதால், சவாலான டிரைவிங் முறைக்கு ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளாரா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

எட்டு வடிவத்தில், கூர்மையான கோணங்கள் இல்லாத காரணத்தினால், வாகனத்தை செலுத்துவது எளிது. அது போக, வாகனத்தை ஓட்டும்போது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வரவேண்டும் என்பதால், எத்தனை வாகனத்தை ஒரே நேரத்தில் ஓட்டிப்பார்க்கச் சொன்னாலும் கண்காணிப்பது எளிது. எட்டு போடுவதில், இத்தனை பெனிஃபிட் இருக்கும் போது, ஏன் தேவையில்லாமல் புதுசு புதுசா கண்டுபிடித்து, மக்களை பயமுறுத்த வேண்டும் என்று, பழைய முறையே இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

வாங்கிய தங்கத்தை வீட்டிலே வைத்திருக்காமல் அதன் மூலம் வருமானம் பார்க்க ஒரு வழி! 100% பாத...

Quick Share

கையில் நகை இருப்பு உள்ளது. லாக் டவுன் நேரத்தில் வீட்டில் வைத்து கொள்வதில் பயம். இந்த நேரத்தில் நகையை விற்பது முட்டாள் தனமாக தோன்றுகிறது. ஏனெனில் தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நகையும் கையை விட்டு செல்லக்கூடாது, அதே நேரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன் மூலம் வருமானமும் வேண்டும் என்ற நோக்கில் வங்கிக்கு சென்றபோது அவர்கள் கொடுத்த சில அறிவுரைகள், 

முதலில் பேங்க் லாக்கரில் வைக்கலாம் என முடிவு செய்தோம். அது குறித்து விசாரித்த போது, லாக்கர் நிரம்பும் வரை நகை அல்லது பணத்தை வைத்து கொள்ளலாம். இதற்கென  எந்த வரியும் இல்லை. ஆனால் நாம் தேர்வு செய்யும் லாக்கர் சைஸ் அளவிற்கு தகுந்தாற் போல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள். வங்கிக்கு வங்கி இந்த கட்டணம் வேறுபடும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நாம் லாக்கர் வைத்துள்ள வங்கி களவாடப்பட்டால் அல்லது விபத்திற்கு உள்ளானால் நமது லாக்கரில் இருந்த பொருளுக்கு எந்த இழப்பீடும் கிடையாதாம்.

ஏனெனில் என்ன பொருளை உள்ளே வைத்தீர்கள் என்பது வங்கிக்கு தெரியாது. அந்த லாக்கருக்கு முழு பொறுப்பு நாம்தான். அதே வங்கியில் நகை அடமானம் வைத்திருந்தால் அதற்கு காப்பீடு உண்டு அதேபோல், வங்கி களவாடப்பட்டால் நமக்கு இழப்பீடும் உண்டு.

இது இல்லாமல் மற்றொரு திட்டம் பற்றி கூறினார்கள். இதனை பின்பற்றினால் நீங்க வங்கியில் வைக்கும் நகைக்கு வங்கி வரி கொடுக்கும். அதிக நகை சேர்ந்துவிட்டது, வீட்டில் வைக்க திருட்டு பயம் என  நினைப்பவர்களுக்கு இந்த ஸ்கீம் அருமையான ஒன்று. gold monetization scheme எனும் இந்த திட்டத்தில், நாம் வங்கியில் வைக்கும் நகைக்கு வங்கி நமக்கு 2.75% வட்டி விகிதம் கொடுக்கும். ஆனால் இதில் சில விதிமுறைகள் உள்ளது. 

நாம் கொடுக்கும் தங்கம் 24 காரட்டாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் நமது தங்கத்தை 24 காராட்டாக மாற்றி கொள்வார்கள். நாம் கொடுத்த தங்கத்திற்கு பதிலாக அவர்கள் பாண்ட் பத்திரம் கொடுப்பார்கள். நாம் தங்கத்தை பெற விரும்பினால் இந்த பத்திரத்தை கொடுத்து, 24 காரட் தங்க கட்டியாக பெற்று கொள்ளலாம்.

ஆனால் இப்போது ஒரு பிரச்சனை உள்ளது. தங்கத்தை நாம் கொடுக்கும் போது, ஒரு டிசைனில் கொடுத்திருப்போம். ஆனால் அவர்கள் அதனை 24 காரட்டாக உருக்கி வைத்திருப்பார்கள். வங்கியில் கொடுக்கும் போது இருந்த டிசைன் இப்போது உங்களுக்கு கிடைக்காது. அதே டிசைன் வேண்டுமென்றால், பொற்கொல்லரிடம் கொடுத்து செய்து கொள்ளலாம். 

இதன் சாதகம் என்னவென்றால், நம்பிக்கையான அரசு திட்டம். நாம் கொடுக்கும் தங்கத்தை ரொட்டேஷனில் விட்ட பின்னர் கிடைக்கும் வருமானத்தில் வரும் ஒரு பங்கு நமக்கு கொடுக்கப்படுகிறது. திருட்டு பயம் இல்லை. தங்கத்தின் விலை உயர உயர நமக்கு சாதகம் தான் அதனோடு அரசு கொடுக்கும் வட்டியும் வரும். மேற்க்கண்ட விதிமுறைகளுக்கு ஒத்துப்போனால் இது லாபகரமான திட்டம் தான். 

வீட்ல பாசிப்பயறு இருக்க அப்போ உடனே இப்படி செய்து போடுங்க 2 மடங்கு வெள்ளை ஆகிடுவீங்க..

Quick Share

முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, சருமம் கருப்பாக மாறக்கூடாதெனில், ஒருசில செயல்களை தினமும் செய்து வர வேண்டும்.

அத்தகைய செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஒரு நல்ல பலனைப் பெறலாம். அதிலும் இத்தகைய செயல்களை பின்பற்றினால், 7 நாட்களிலேயே ஒரு நல்ல வித்தியாசம் சருமத்தில் தெரியும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

வீடு கட்டும் போது ஏற்படும், தேவையற்ற செலவுகளை எப்படி கண்டுபிடிப்பது? அஸ்திவாரம் போடும் ...

Quick Share

புதிதாக வீடு கட்டுவதால் இது குறித்து பெரும் அனுபவம் இல்லை. தெரிந்த நண்பர் ஒருவர் என்ஜினியராக உள்ளதால் அவரிடம் சில அறிவுரைகளை பெற்ற போது கிடைத்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் என்னை போல் இப்போது தான் வீடு கட்ட போகிறீர்கள் என்றால், அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு உதவும். இது குறித்து நீங்க விவாதித்தாலே, உங்களுக்கு வீடு கட்டுவது குறித்து சில அடிப்படை அறிவு உள்ளது என ஏமாற்ற நினைப்பவர்கள் கூட உங்களிடம் எச்சரிக்கையாக இருப்பார்கள். 

வீடு கட்டும் முன் சில சோதனைகள் செய்து உறுதி படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், soil bearing capacity test அதாவது மண்ணின் தாங்கு திறன், அடுத்து load bearing capacity அதாவது எந்த மாதிரியான வீடு கட்ட போகிறீர்கள். இது இரண்டும் மிக அடிப்படையான ஒன்று. இதற்கு தெளிவான பதில் கிடைத்தால் தான் பட்ஜெட் கணக்கிட முடியும்.

அடுத்து கஸ்டமரின் தேவைக்கு ஏற்றபடி எப்படியெல்லாம் வேண்டும் என்பதை வைத்து பட்ஜெட் கணக்கிட ஆரம்பிப்பார்கள். உதாரணத்திற்கு வீடு 1000 சதுர அடியில் கட்ட போகிறீர்கள் என வைத்து கொண்டு, அதற்கான செலவை கணிப்போம். முதலில் வரைபடம்(plan), வரைபடத்திற்கான அப்ரூவல்(plan approval), கட்ட வடிவமைப்பு(structural design) இவற்றிற்கு எல்லாம் சேர்த்து 40,000 திலிருந்து 50,000 வரை வரலாம். அடுத்து கட்டுமான பொருட்கள் செங்கல், மணல், கம்பி இவையெல்லாம் சேர்த்து எட்டு முதல் ஒன்பது லட்சம் வரலாம். 

தொழிலாளர்கள் செலவு நாலு முதல் நாலரை லட்சம் வரலாம். டைல்ஸ் மற்றும் பெயின்டிங் சேர்த்தால் ஒன்னு முதல் ஒன்றரை லட்சம் ஆகலாம். மொத்த செலவு 13 லட்சம் முதல் 14 வரை வரக்கூடும். நடுத்தர நகரம் எனில் இந்த செலவு பொருந்தும். சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில் இன்னும் ஆகலாம். மெட்டீரியல் செலவை நம்ப முடியாது என்பதால், எப்போதுமே வீடுகட்டும் போது கையில் கொஞ்சம் எஸ்டிமேட் செய்வதை விட கூடுமானதாக வைத்துக்கொள்வது நல்லது.

அடுத்து முக்கியமான ஒன்று இந்த செலவில் கதவு, ஜன்னல், போர் செலவு, வாட்டர் டேங்க், செப்டிக் டேங்க், ஒயரிங் வேலை இதெல்லாம் இந்த லிஸ்டில் வராது. இதற்கெல்லாம் தனியாக ஒரு அமொண்ட்டை எடுத்து வைத்து கொள்ளுங்கள். 

சரி, என்னவெல்லாம் செய்தால் செலவை குறைக்க முடியும் என்பதை பார்ப்போம். ஆற்று மணலுக்கு பதில் எம்-சேன்ட், செங்கலுக்கு பதில் சாலிட்ப்ளாக் அல்லது இன்டர் லாக்கிங் செங்கல் பயன்படுத்தினால் மொத்த செலவில் இருந்து பத்து முதல் பதினைந்து சதவீதம் செலவை குறைக்க முடியும்.

முதலில் சொன்னது போல் தான், மண்ணின் தாங்கு திறன் மற்றும் எந்த மாதிரியான வீடு கட்ட போகிறீர்கள் என்பதை பொறுத்து செலவு இடத்திற்கு இடம் மாறுபடும். நாம் கட்டும் வீடு ஆற்றுப்படுகை அருகோ அல்லது கடல் பகுதி அருகோ அல்லது களிமண் கொண்ட பகுதியாக இருந்தால் மண்ணின் தாங்கு திறன் (soil testing) கண்டறிவது இன்றியமையாதது. 




You cannot copy content of this Website