யாரை கேலி செய்தீர்களோ, அவர் வாழ்க்கையில் உங்களை விட ஒரு படி முன்னேறி இருப்பார்! புத்திய...
நம்மை கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் அனுபவமாகிக்கொண்டே தான் இருக்கும். அதனை உணர்ந்து கொண்டவர்கள் பிழைத்துக்கொள்கின்றனர். உணர திணறுபவர்கள், ஒவ்வொரு அடியிலும் சறுக்கலை சந்திக்கின்றனர். விட்டதை பிடிக்க ஓடி ஓடி உழைக்காமல், விட்ட இடத்தில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த அடியை எடுத்துவைத்தால், மேற்கொண்டு எதையும் இழக்க மாட்டோம். அப்படி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு செய்த சில தவறுகளின் பட்டியலை ஒரு தொகுப்பாக காணலாம்.
1. எனக்கு கோபம் வரும் என்பதை நம்மை விட பலம் குறைந்தவர்களிடமும், பய உணர்வு உண்டு என்பதை நம்மை விட வலிமையானவர்களிடம் காண்பிக்கும் பழக்கம் ரொம்ப மோசமானது.
2. எப்போதும் யாராவது முதல் அடி எடுத்து வைக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு, அவர்கள் பின்னால் போவது என்னைக்கும் வெற்றியை கொடுக்காது. ஒருவர் உருவாக்கிய பாதையில் பின்னால் போனால், அவர் கண்ட கனவு பலிக்குமே தவிர, உங்கள் கனவு எப்படி நிறைவேறும்?
3. பிறர் என்ன நினைப்பார் என்பதை நினைத்து நினைத்து, தான் மனதில் நினைத்ததை கடைசி வரைக்கும் நிறைவேற்றாமல் பிறரை கண்டு மனம் நொந்தே காலத்தை ஓட்டுவது ரொம்ப கஷ்டம்.
4. அரசாங்கத்தை குறை கூறுவோம். அடுத்த நிமிடமே ரேஷனில் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் முதல் ஆளாக கியூவில் நிற்போம். யாரும் ஆரோக்கியமான விமர்சனங்கள் செய்ய முயற்சி செய்வதில்லை.
5. நீங்கள் யாரை கீழ்த்தரமாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவரால் உங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் மாற்றம் வரலாம்.
6. பணத்தை அளவுக்கு மீறி சேமித்துவிட்டு, ஒரு நாள் நினைவுகள் சேமிக்கவில்லையே என வருத்தப்படுவீர்கள். இருக்கும் போதே வாழ்ந்துவிடுவது நல்லது.
7. மனசுதான் முக்கியம் என்று சொல்லும் திருமணங்களில் முதலில் கேட்கப்படுவது, ஜாதகம் இருக்கா? என்பதே! வாய் வார்த்தைகளை வைத்து என்றைக்கும் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
8. தோற்றத்தை வைத்து, இவனெல்லாம் எங்க உருப்படப்போறான்? என்று நினைக்கும் நபர், ஒரு நாள் உங்களைவிட, ஒரு படி உயர்ந்த நிலையில் இருப்பார்.
9. ரொம்ப பாசம் காட்டுகிறேன் என்ற பெயரில், தொல்லையாக மாறுவது கூட குற்றமே. மீன் பிடிக்க சொல்லிக்கொடுக்கலாம். மீனை ஊட்டி விடுகிறேன் என்று வாயில் திணித்தால், முள் தொண்டையில் குத்தும்.
10. அடுத்தவர் செய்யும் தப்பை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்கும் நமது கண்கள், நாம் தப்பு செய்யும் போது, ஏதாவது ஒரு காரணத்தை நினைத்து மனதை தேற்றிக்கொள்ளும்.