தல தோனியின் கர்ஜனையில் அதிர்ந்து போன Umpire.., கொடுத்துதான் பாரேன் !!
நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி ஜெயித்தது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை சென்னை அணி எடுத்தது. இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதாராபாத் அணி விளையாடியது.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி, அம்பயரை கோபமாக முறைத்து பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19-வது ஓவரை சர்துல் தாக்கூர் வீசினார். 19 வரின் 2-வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அவர் அதற்கு முந்தைய ஓவரில் நல்ல அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். அதனால் அவர் விளாசி விடுவார் என்பதற்காக பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார் தாக்கூர். அந்த பந்து வைடு என்பதுபோல தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவ்வாறுதான் அவர் வீசி நடுவர் வைடு கொடுத்திருந்தார்.
இதனை அடுத்து இந்த பந்துக்கும் நடுவர் திரும்பி கையை அகலமாக விரித்து வைடு என சொல்வதற்கு முயற்சி செய்தார். தோனி முறைத்தபடியே அம்பயரை பார்த்து செய்கை காட்டி சொன்னார். இதைப்பார்த்த அம்பயர் குழம்பிவிட்டார், பின்னர் கையை அப்படியே கீழே இறக்கி திரும்பிவிட்டார். இதை வெளியே உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோபமாகி ஆகிவிட்டார். இந்த செயல் அரங்கைத்தையே அதிரவைத்தது.