தமிழகம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்கள்! ஏரியில் மூழ்கி பலியான சோகம்

Quick Share

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரவிருக்கும் நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை, போருர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரிஷிகேஷ். விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர். அங்கு ஏரியின் 4 -வது மதகின் கீழே இறங்கி கால்களை நனைத்து விளையாடியுள்ளனர். அப்போது, திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர்.

அதை பார்த்த அவர்களது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் மீட்க முடியாமல் போனது. பின்னர், தகவலிருந்த பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏரியில் இருந்து இரு மாணவர்களின் உடலை மீட்டனர்.

கல்லூரியில் சேர காத்திருப்பு

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு காத்திருந்தது தெரியவந்துள்ளது.

தற்போது, ஏரியை நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி பார்க்க வந்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருட வந்த வீட்டில் டீ போட்டுக் குடித்து கூலாக சென்ற திருடர்கள்!

Quick Share

தமிழகத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், திருடிய வீட்டில் டீ போட்டுக் குடித்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் அசோகன் மற்றும் சித்ரா. 

இவர்கள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளனர் திருமணத்தை முடித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது.

பின்பு, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பொருள்கள் உடைந்து, சிதறி கிடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பீரோவில் இருந்த 17 பவுன் நகை காணாமல் போயுள்ளது. 

இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதியினர் திருவண்ணாமலை மாவட்ட தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

டீ போட்டுக் குடித்து சென்ற திருடர்கள்

பின்னர், தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்த போது, வீட்டில் திருட வந்த திருடர்கள் டீ போட்டுக் குடித்துச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அண்மையில், இந்த பகுதிக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து குத்து விளக்கு, ஸ்பீக்கர் திருடு போனது குறிப்பிடத்தக்கது.  

ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்த தமிழ் சிறுவன்!

Quick Share

உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அஜர்பைஜானில் நடந்த உலகக்கோப்பை செஸ் போட்டியில் போராடி தோல்வி அடைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

கார்ல்சன் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 91 லட்சம் பரிசுத்தொகையாக பெறுகிறார்.

அதேபோல் பிரக்ஞானந்தா 67 லட்சம் பரிசு பெறுகிறார். வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா பிரக்ஞானந்தாவினால் பெருமைபடுகிறது என மோடி பாராட்டியுள்ள நிலையில், உங்கள் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது என ஸ்டாலினும் கூறியுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது பதிவில், ‘ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் பிரக்ஞானந்தா! உங்களின் கதை மிகவும் ஊக்கமளிக்கிறது. உங்களுக்காக அனைத்தையும் வைத்துக் கொண்டு எதிர்காலம் காத்திருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மோமோஸ் விற்றே 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்த இளைஞர்கள்

Quick Share

இந்திய மாநிலம், மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் மோமோஸ் விற்றே 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர்.

யார் இவர்கள்?

தற்போதைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த உணவாக மோமோஸ் இருக்கிறது. இதற்காக ஒரு தனி உணவு பிரியர்களே இருக்கின்றனர். 

இப்படிபட்ட உணவு நிறுவனத்தை உருவாக்கியவர்கள் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த நண்பர்கள் சாகர் தர்யாணி மற்றும் பினோத் குமார்.

இவர்கள் இருவரும் இணைந்து தான் வாவ் மோமோஸ் நிறுவனத்தை உருவாக்கினார்கள். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் சாகர் தர்யாணி பட்டம் பெற்றார். 

பின்பு, இவரது பெற்றோர் மேற்படிப்பு படிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், இவர் மோமோஸ் குறித்து ஐடியா சொல்லவே, அவரது பெற்றோர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரூ.30,000 முதலீடு

பின்னர், நண்பர்கள் இருவரும் பெற்றோர்களை சமாளித்து கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.30,000 முதலீட்டில் சிறிய வாவ் மோமோஸ் கடையை திறந்தனர். 

அப்போது, இவர்களது கடையில், 2 பகுதி நேர சமையல்காரர்கள் மட்டும் இருந்தனர். மேலும், இவர்கள் முதல் 2 ஆண்டுகள் கடுமையான விளைவுகளை சந்தித்தனர்.

பின்பு, மோமோஸில் பல வகைகளை முயற்சி செய்து அதற்கான வரவேற்பை பெற்று கொல்கத்தாவில் பல கடைகளை திறந்தனர். ஆனால், இவர்களது முயற்சியால் தற்போது இந்தியா முழுவதும் 800 வாவ் மோமோஸ் கடைகள் உள்ளது. 

ரூ.30,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த வாவ் மோமோஸ் கடையின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2100 கோடி ரூபாய். ஒரு நாளுக்கு ரூ.6 லட்சம் மோமோஸ் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.   

சந்திரயான் -3 வெற்றியை பரோட்டா போட்டு கொண்டாடிய பரோட்டா மாஸ்டர்

Quick Share

உலகமே சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வரும் நேரத்தில் பரோட்டா போட்டு வித்தியாசமான முறையில் பரோட்டா மாஸ்டர் கொண்டாடியுள்ளார்.

சந்திரயான் – 3 வெற்றி கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

இதனை அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை கொண்டாடி வருகின்றனர்.

பரோட்டா மாஸ்டரின் கொண்டாட்டம்

தமிழக மாவட்டம், திருவாரூரில் உள்ள திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஒருவர் இஸ்ரோ மற்றும் ராக்கெட் வடிவத்தில் பரோட்டா போட்டு அசத்தியுள்ளார்.

அதாவது, ராக்கெட் மற்றும் ‘ISRO 3’ என்ற வடிவத்தில் பரோட்டா போட்டு தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம்பெண் பலி

Quick Share

யூடியூப் பார்த்துவிட்டு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி புளியம்பட்டியைச் சேர்ந்த லோகநாயகி (27), பிரசவத்தை தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்த, கணவர் மாதேஷ் (30)-ஐ போலீசார் கைது செய்தனர். குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லோகநாயகிக்கு செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் பிரசவம் நடந்தது. அவரது கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். இருப்பினும், அப்பெண்ணின் நிலை மோசமடைந்தது. இதனால், தாயும், சிசுவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே அப்பெண் இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இதனை தொடர்ந்து, கணவரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீதமுடிவு!

Quick Share

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்த்த ஏழுமலை என்பவரின் மகள் சவுந்தர்யா (வயது 22). 

இவருக்கும் மங்காவரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேஷ் (25) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டரை வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் ஏதும் இல்லை. 

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த சவுந்தர்யா அதனை உறவினர்களிடம் தெரிவித்து மனசங்கடப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் கடுமையான மன உளைச்சலில் இளம்பெண் சவுந்தர்யா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி வீட்டில் தனியே இருக்கும்போது எறும்பு மருந்தை (விஷம்) எடுத்து சவுந்தர்யா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் சவுந்தர்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் சவுந்தர்யா எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தியா நிலவில் உள்ளது! சந்திரயான்-3 மாபெரும் பாய்ச்சல் – தமிழக முதல்வர் ஸ்டாலின்

Quick Share

இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றிகர தரையிறக்கத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

சந்திரயான்-3 

இந்தியாவையே எதிர்பார்ப்பில் ஆழ்த்திய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. 

இந்த வரலாற்று வெற்றியை விண்வெளித்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியினரும் அயர்லாந்தில் இருந்தபடி சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடினர்.

முதலமைச்சர் வாழ்த்து

இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து பதிவில், 

‘இந்தியா நிலவில் உள்ளது! சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய 4வது நாடாக இந்தியா உள்ளது.

இது ஒரு மகத்தான சாதனை. அயராது முயற்சி மேற்கொண்ட ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுகள். சந்திரயான்-3 வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு மாபெரும் பாய்ச்சல்’ என தெரிவித்துள்ளார்.  

7 ஆண்டுகளாக பெண் பார்த்தும் திருமணமாகவில்லை! விரக்தியில் தமிழக இளைஞர் எடுத்த முடிவு

Quick Share

தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகாத விரக்தி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். 32 வயதான இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3யில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக வினோத்திற்கு திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், வினோத்தின் ஜாதகம் சரியாக அமையவில்லை. இதனால், திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் வினோத் இருந்ததாக கூறப்படுகிறது. 

விபரீத முடிவு 

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி வினோத் இருந்துள்ளார். அதனை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்பு, சிப்காட் பொலிசார் விரைந்து வந்து வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா, இல்லை வேறு காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

ஜெயிலர் படம் பார்த்த பின்பு கடிதம் எழுதி தமிழர் தற்கொலை

Quick Share

தமிழக மின் ஊழியர் ஒருவர் பணம் பணம் என்று அலைய வேண்டாம், அதனை தாண்டி நிறைய சந்தோஷங்கள் உள்ளது என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம் செய்ய நிச்சயதார்த்தம்

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்து உள்ள மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் எஃப்ஆர்எஃப்சிஎஃப் (FRFCF) என்ற பிரிவில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இதனையடுத்து, கோபிநாத்திற்கும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, நிச்சயதார்த்த அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுப்பதற்காக கோபிநாத் பெற்றோர் சென்றிருந்தனர்.

தற்கொலை 

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இரவு காட்சியை பார்த்து விட்டு கோபிநாத் வீட்டில் தனியாக உறங்கினார். மறுநாள் காலையில் கோபிநாத்தின் தந்தை வேணு, செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், கோபிநாத் போனை எடுக்கவில்லை.

பின்னர், பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு கோபிநாத்தின் தந்தை போன் செய்துள்ளார். அப்போது, உறவினர்கள் கோபிநாத் வீட்டிற்கு சென்று அவர் இருக்கும் கதவை தட்டிய போது கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் புடவையை வைத்து தூக்கில் தொங்கியபடி கோபிநாத் இருந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வேணுவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கல்பாக்கம் கவால்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்பு, கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர். 

சிக்கிய கடிதம் 

இதனையடுத்து, கோபிநாத்தின் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையில், கோபிநாத் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அவர் அந்த கடிதத்தில்,”நிச்சயம் செய்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். என்னை மன்னித்து விடு. நான் உன்னைவிட்டு போகிறேன்.

பணம் பணம் என்று அலைய வேண்டாம். பணம் மட்டும் வாழ்க்கையில்லை. அதையும் தாண்டி நிறைய சந்தோஷங்கள் இருக்கிறது. நான் இறந்த பிறகு வரும் மத்திய அரசின் பணத்தை என்னுடைய தாயாரிடம் கொடுத்துவிடுங்கள். என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. 

இந்த பூமியில் யாரும் பெரிய ஆள் கிடையாது. எல்லோரையும் விட்டு விடைபெறுகிறேன். இப்படிக்கு வேறு வழி இல்லாத கோபிநாத் ஆத்மா” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆணுறுப்பில் வெளியேறும் மாதவிடாய், விந்து..வேதனையில் தமிழ் சீரியல் நடிகர்

Quick Share

தமிழகத்தில் முதல் இடைபாலினத்தவராக அடையாள அட்டையைப் பெற்ற தமிழ் சீரியல் நடிகர் சக்கரவர்த்தி, தான் மீளா துயரத்தில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். 

முதல் இடைபாலினம் 

சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர், பின்னணிக்குரல் கலைஞர் என பன்முகம் கொண்டவர் சக்கரவர்த்தி. 

தற்போது இவர் தமிழகத்தில் முதல் நபராக இடைபாலினம் அடையாள அட்டையை பெற்றுள்ளார். 

இதற்கு காரணம் ஆணாக பிறந்த இவர் கர்ப்பப்பையை கொண்டிருந்தார். அத்துடன் தனது பிறப்புறுப்பில் மாதவிடாய், விந்து வெளியேறுவதால் கடுமையான வேதனையையும் அனுபவித்து வந்தார். 

சக்கரவர்த்தி 10 வயதை கடந்தபோது ஆணுறுப்பு வழியாக மாதவிடாய் வெளியேறுவதை கண்டு பயந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 11 வயதில் விந்து வெளியேறியுள்ளது. அதன் பின்னர் மருத்துவரை நாடியபோது தான் கர்ப்பப்பை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த விடயம் பள்ளியில் சக மாணவர்களுக்கு தெரிய வர, சக்கரவர்த்தி கேலிக்கு ஆளாகியுள்ளார். அதனால் படிப்பையும் பாதியில் விட்டுவிட்டார்.

தற்கொலை முயற்சி

ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற சக்கரவர்த்தியை அவரது தாய் தடுத்து தைரியம் கொடுத்துள்ளார். அவரின் அறிவுரையின் பேரில் தொகுப்பாளர், நடிகர், பின்னணிக்குரல் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவராக உருவெடுத்துள்ளார். 

தனது 38வது வயதில் தான் ஒரு இடைபாலினம் என்பதை சக்கரவர்த்தி அறிந்துகொண்டுள்ளார். இந்த வலியில் இருந்து தப்பிக்க கர்ப்பப்பையை எடுக்க முடிவு செய்து அகற்றியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் பிரச்சனை நிற்கவில்லை. 

ஆணுறுப்பு அகற்றம்

வலியும், உடல் நோயும் அதிகரித்ததால், புற்றுநோய் ஏற்படாமல் இருக்க தனது ஆணுறுப்பையும் அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு சக்கரவர்த்தி தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை இடைபாலினம் என பொதுவெளியில் வெளிப்படுத்தியதால் சீரியல் வாய்ப்பு உள்ளிட்ட வேலைகளை இழந்து போராடி வருகிறார்.

தனக்கு அரசு உதவ வேண்டும் எனவும், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் சக்கரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் மீண்டு வந்தால் தன்னால் முடிந்த சேவையை செய்வேன் எனவும் கூறியுள்ளார். 

சரியும் லெஜெண்ட் அண்ணாச்சியின் சாம்ராஜ்யம்!

Quick Share

தமிழகத்திலேயே மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான். சென்னையின் ஒரு அடையாளமாகவே இது மாறி இருந்தது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளை பார்த்து தான் அடுத்தடுத்து தொழில் தொடங்குபவர்கள் அதே மாதிரி துணி வியாபாரம், பாத்திரம் வியாபாரம், நகை வியாபாரம் என ஆரம்பித்தார்கள். எத்தனை போட்டி வந்தாலும் இந்த கடை எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருந்தது.

சென்னையில் தியாகராஜ நகரில் ஆரம்பிக்கப்பட்ட தங்களுடைய தொழிலை இந்த நிறுவனம் சென்னை முழுக்க தொடங்கியதோடு, தமிழகம் முழுக்க ஆரம்பிக்கும் பிளானிலும் இருந்தது. இந்த நிறுவனத்திற்கு என்று தனி பெயரே இருக்கிறது. தமிழகம் முழுக்க உள்ள மக்கள் இந்த ஒரு கடைக்காகவே சென்னை நோக்கி வந்திருக்கிறார்கள்.

அப்படி பேர் போன இந்த கடை சமீப காலமாக பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கரண்ட் பில் கட்டவில்லை என்றெல்லாம் ஒரு சில கிளைகளை மூடும் அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் ஒரு கிளையை 300 கோடிக்கு விற்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

சரவணா ஸ்டோர்ஸ் இந்த மிகப்பெரிய சரிவிற்கு காரணம் அதனுடைய ஓனர் லெஜன்ட் சரவணா தான். ஆரம்பத்தில் இருந்தே இந்த கடையின் விளம்பரங்களில் நடிப்பதற்கு மட்டும் முன்னணி நடிகைகள், மற்ற மொழி நடிகைகளை எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருந்தார் இவர்.

பின்னர் தானே விளம்பரப் படங்களில் நடித்துக் கொள்கிறேன் என்று களமிறங்கிய இவருக்கு ஹீரோ ஆசையும் வந்துவிட்டது. ஹீரோவாக நடித்தே தீருவேன் என்று சொந்த பணத்தைப் போட்டு லெஜன்ட் படத்தை எடுத்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து விட்டது. போட்ட பணத்தில் பாதியைக் கூட அவரால் எடுக்க முடியவில்லை.

தொழில் ரீதியாக சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமா மோகத்தினாலும், நடிகைகளின் மீதான ஆசையினாலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த இவர் தற்போது தான் ஆசையாக உருவாக்கிய கிளைகளை மூடும் அளவிற்கு கஷ்டத்தை சந்தித்திருக்கிறார். ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யமாக இருந்த சரவணா ஸ்டோர்ஸ் தற்போது சரியத் தொடங்கி விட்டது.




You cannot copy content of this Website