Uncategorized

அய்யோ அவர் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் “எல்லைமீறி போய்டுமே”…

Quick Share

பிக் பாஸ் 6 வீட்டிற்கு கமல் ஹாசன் பட ஹீரோயின் மட்டும் வந்தால் A பிரச்சனையாகிவிடும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் வேட்டைக்கு ரெடியா என்று டீஸரை வெளியிட்டனர். அது என்ன வேட்டை என்று பலரும் கேட்டார்கள். இதையடுத்து போட்டியாளர்கள் மான், புலி, பாம்பு, கழுகு, யானை போன்றவர்கள் என கமல் ஹாசன் விளக்கம் அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

போட்டியாளர்கள்

பிக் பாஸ் 6 வீட்டிற்கு யார் எல்லாம் செல்லவிருக்கிறார்கள் என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் கவர்ச்சிக்கு பெயர் போன கிரண், பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் படுகவர்ச்சி காட்டி வரும் கிரணால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு A பிரச்சனை வரும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிரச்சனை

அது என்ன A பிரச்சனை என்று கேட்கிறீர்களா?. பிக் பாஸ் வீட்டிற்கு கிரண் வந்தால், கவர்ச்சியில் எல்லை தாண்டி விடுவார். இதை பார்த்துவிட்டு சென்சார் போர்டு தலையிட வேண்டும். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு A சான்று கொடுத்துவிடுவார்கள். அதை தான் A பிரச்சனை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு பாடகர் அல்லது பாடகியை போட்டியாளராக தேர்வு செய்து வருகிறார்கள். அதனால் ராஜலட்சுமியை பிக் பாஸ் வீட்டில் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு 

பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் மரணம்!! தந்தை போலீசில் புகார்!

Quick Share

இந்தியாவில் தமிழ்நாட்டு மாநிலத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒயிட் பாஸ்தா சாப்பிட்ட பிரதியா என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்த பிரதியா (22) என்ற இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 13ம் திகதி இருவரும் திருமணம் செய்துக்கொண்டு அதேபகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் தம்பதிகள் இருவரும் நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய நிலையில், திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுங்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் பிரதியா ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து படுத்துள்ளார்.

ஆனால் சாப்பிட்ட உணவு செரிக்காமல் அவதியடைந்த பிரதிபாக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது கணவர் விஜயகுமார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரதிபாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார், இருப்பினும் பிரதிபா சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பழனி கஞ்சனூர் காவல் நிலையத்தில் பிரதிபாவின் தந்தை, தனது மகள் விசம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனால் பிரதிபாவின் காதல் கணவன் விஜயகுமார் மற்றும் பாஸ்தா உணவகம் ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இளம்பெண் இருதய அடைப்பு பிரச்சனைகளுக்காக தினசரி மாத்திரை எடுத்து வந்திருக்கிறார்.

எனவே உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே இளம் பெண்உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இனி ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

Quick Share

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் விதிப்பது வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை உருவாக்குவதாகவும், அது நுகர்வோரின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், அத்தகைய புகார்களை முதன்மையாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 01.04.2021 முதல் 20.06.2022 வரை, 537 புகார்கள் நுகர்வோரால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், சேவைக் கட்டண புகார்களில் முதல் 5 இடத்தில் புது தில்லி, பெங்களூர், மும்பை, புனே மற்றும் காசியாபாத் ஆகியவை உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி-2 கலக்கும் த்ரிஷா.! கொண்டாடும் ரசிகர்கள்…

Quick Share

பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு உட்படப் பலர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பி. வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. 

இந்நிலையில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்த வேடத்தில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கண்ணா இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வேடத்தில் நடிப்பதற்கு த்ரிஷாவிடம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும் கேரட் பால்:

Quick Share

தேவையான பொருள்கள்:
பால் : 1 லிட்டர்
சர்க்கரை : 1/4 கிலோ
ஏலக்காய் : 5 கிராம்
கேரட் : 1/2 கிலோ
செய்முறை :

  1. பால் பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.
  2. காய்ச்சும் போது ஏலக்காயை பொடியாக்கி போடவேண்டும்.
  3. 1லிட்டர் பாலுக்கு 5 கிராம் ஏலக்காய் தேவைப்படலாம்.
  4. காய்ச்சிய பாலில் 1 லிட்டர் பாலுக்கு 1/4 கிலோ சர்க்கரை போட்டு கலக்கவேண்டும்.
  5. காரட்டை அரைத்து சாறை ஊற்றினால் அற்புதமான நிறம் கிடைக்கும். தேவையான அளவுக்கு ஊற்றிக் கொள்ளலாம்

ஒரே ஒரு சிப்ஸ்-ன் விலை ரூ.1.63 லட்சம்!

Quick Share

ebay ஷாப்பிங் தளத்தில், ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ சுமார் 1.63 லட்சம் ரூபாய்க்கு இங்கிலாந்தின் Buckinghampshire-ஐ சேர்ந்த நபர் விற்பனை செய்துள்ளார். அந்த சிப்ஸ்-ன் வடிவம் மிகவும் தனித்துவமாக இருந்ததால் இவ்வளவு விலை நிர்ணயித்துள்ளாக குறிப்பிட்டுள்ளார்.

87 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்!

Quick Share

ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் குறைந்தது 87 முறை கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஃப்ரீ பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

தினமும் பல முறை தடுப்பூசி…

Frei Presse செய்தித்தாளின் தகவலின்படி, 61 வயதான நபர் கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களான Saxony மற்றும் Saxony-Anhalt-ல் உள்ள பல தடுப்பூசி மையங்களுக்கு சென்றுள்ளார்.

சாக்சோனி மாநிலத்தில் மட்டும் 87 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பதிவுசெய்து, வெவ்வேறு தடுப்பூசி தளங்களில் அந்த நபர் ஒரு நாளைக்கு மூன்று முறை தடுப்பூசி பெற்றதாக நம்பப்படுகிறது.

வசமாக சிக்கினார்

டிரெஸ்டன் நகரில் உள்ள ஒரு மையத்தில் உள்ள ஒரு ஊழியர் அந்த நபரை அடையாளம் கண்டுகொண்டபோது சந்தேகமடைந்தார்.

அடுத்த முறை அவர் Leipzig நகரத்திற்கு வெளியே உள்ள Eilenburg நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் நுழைந்தபோது, ​​​​ஊழியர்கள் காவல்துறையை அழைத்து அவரை தடுத்து கைது செய்தனர்.

அவர் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை விற்பதில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

குற்றவியல் விசாரணைகள் தற்போது சாக்சோனி மாநிலத்தில் நடந்து வருகின்றன, மற்ற ஜேர்மன் மாநிலங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த நபரை விசாரித்து வருகின்றனர்.

அவர் உண்மையில் எத்தனை முறை கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை 87 முறையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவர் எப்படி இவ்வளவு நாள் தப்பித்தார்?

அறிக்கையின்படி, ஒவ்வொரு முறையும் அந்த நபர் தடுப்பூசி போடும் இடத்திற்குள் நுழையும் போது, ​​ஒரு புதிய, வெற்று தடுப்பூசி ஆவணத்தை தன்னுடன் கொண்டு வருவார்.

தடுப்பூசி கிடைத்ததும், கிடைத்த தடுப்பூசி சான்றிதழ்களில் தகவல்களை நீக்கிவிட்டு, அதனை தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு விற்றுள்ளார்.

உச்சம் தொட்ட பெட்ரோல் விலை…!

Quick Share

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 
இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த 9 நாட்களில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாரின் கள்ளக்காதலன் மருமகளை தாக்கிய கோரம் !என்ன நடந்தது தெரியுமா?

Quick Share

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. 

இதனிடையே மாமியார் வீட்டில் இருந்த அவர், மாமியார் தகாத உறவில் நபருடன் பழகி வந்துள்ளார். வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அவர் வந்து சென்றதால், ஆத்திரமடைந்து மாமியாருடன் மருமகள் சண்டையிட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு அவன் மாமியாரை பார்க்க வந்ததால், அந்த நபரை வாசலில் மறைத்த மருமகள் வைஷ்ணவி, அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்தை பலமாக தாக்கியுள்ளார். இதில் வைஷ்ணவியின் கண் அருகே கடுமையான காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, உடனடியாக மருமகள் வைஷ்ணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, கணவர் வேலைக்கு சென்றதும் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும், தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என கூறி விடுவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஷேன் வார்னே மறைவிற்கு இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இரங்கல்!

Quick Share

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக  இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே,  நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.
ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில்  மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் மற்றும் ரோட் மார்ஷ் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்திய அணி வீரர்கள் இன்றைய நாள் ஆட்டத்தில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்த தகவலை பி சி சி ஐ தெரிவித்தது.

பாலா படத்தில் நடிக்கவுள்ள சூர்யா – ஜோதிகா ஜோடி!

Quick Share

தற்போது பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் பாலாவின் இந்த கதையில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குமுன் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் அறிமுகமாகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்..!

Quick Share

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ‘பிர்சா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 
பிர்சா முண்டா 19-ம் நூற்றாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர். இந்த படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஷரீன் மந்திரி, கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கின்றனர். 




You cannot copy content of this Website