Uncategorized

கொரோனா : ”நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள்”

Quick Share

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள் பற்றிய விவரங்கள்..

காலை 7 மணி – இஞ்சி மற்றும் எலுமிச்சைபோட்டு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
காலை 8.30 மணி – 2 இட்லி (சாம்பார் மற்றும் வெங்காய சட்னி), சம்பா ரவை கோதுமை உப்மா, 2 முட்டை, பால், பழரசம்

காலை 11 மணி – சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு உப்புக் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்

மதியம் 1 மணி – 2 சப்பாத்தி, புதினா சாதம் (1 கப்), வேகவைத்த காய்கறிகள் (1 கப்), பெப்பர் ரசம் (1 கப்), உடைத்த கடலை (1 கப்)
மாலை 3 மணி – மிளகுடன் மஞ்சள் கலந்த வெந்நீர்

மாலை 5 மணி – கொண்டைக்கடலை சுண்டல்

இரவு 8 மணி –
2 சப்பாத்தி (ஆனியன் சட்னி) இட்லி அல்லது சம்பா கோதுவை ரவை உப்மா, 1 முட்டை.

இது அவர்களுக்கு மட்டும் அல்ல நம் எல்லாருக்கும் தான். Stay healthy .!! Stay safe.!!

சென்னையில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் – அமைச்சர் ஜெயக்குமார்

Quick Share

தமிழகத்தில் இது வரை 27 கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் 21 நாள் தடை விதத்திலிருந்து அணைத்து மாநிலங்களில் அவசர கால நடவடிக்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் நாட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கு பனி நடைபெற்று வருகிறது.

சென்னையில் போது இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதுவரை சென்னையில் 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இந்த 24,000 பேர் தங்கியிருக்கும் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம், மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் – ...

Quick Share

தமிழக அரசு கொரோனவை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், “திருச்சியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்தவர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இதுவரை தமிழ்நாட்டில் இதுவரை 27 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

நாங்கலாம் அரசு அதிகாரிங்க இப்படி தான் வேலை பாப்போம் – அலட்சியத்தின் உச்சம்.

Quick Share

கொரோனா வைரஸின் பிடி இன்னும் கொஞ்சமும் தளரவில்லை என்பது மக்களுக்கு பெரும் க வலையாக இருந்து வருகிறது.

இது ஒரு தொற்று நோய் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் நெறுங்கிப் பழகவே ப யந்து வ ருகின்றனர்.

இந்த பயங்கர தொற்று நோய் பரவாமல் இருக்க அரசாங்கம் இரவு பகலாக அயராது உழைத்து கொண்டு இருக்கும் இந்த வேலையில் சற்றும் , நோயின் தீவிரத்தை பற்றி யோசிக்காம அலட்சியமாக , மக்களின் வரி பணத்தில் வேலை செய்யும் ஒரு சில அரசு அதிகாரிகள் செய்யும் இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்துவருகின்றனர் .

ஆபீசரு செக் பண்ணற லட்சனத்த பாத்தியா.

Posted by Raghavan on Friday, March 20, 2020

கொரோனா: இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிட கூடாது – நடிகர் சூர்யா எச்சரிக்கை

Quick Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது இதுவரை 9 பேர் இந்த கொடிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக துபாயில் இருந்து திருநெல்வேலி திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

திரையுலக பிரபலங்கள் விழிப்புணர்வு வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகர் சூர்யா மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர் “கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாம் பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு தான். நாம் இப்போது வீட்டில் இருந்தே போராட வேண்டும். சீனாவை விட இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகமாகக் காரணம் மக்கள் அறியாமையில் வெளியே சென்றது தான். இந்தியா, இத்தாலி போன்று ஆகிவிடக்கூடாது.

மக்கள் அனைவரும் கூட்டமாக கூடாமல் விலகி இருக்க வேண்டும் வெளியில் சென்று வந்தால் கை, கால்களை கழுவ வேண்டும் என்று சொல்கிறார்கள். இருமல், காய்ச்சல் வந்தாலே அது கரோனா கிடையாது. ஆனால் அது தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக மருத்துவர்களை அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் சென்றால் அவரை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு மன்னிக்க முடியாத தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நமக்காகத் தான் அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து வெளியில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்காக வீட்டிலேயே இருக்கலாம். உண்மையான தேவைக்கு மட்டுமே வெளியில் செல்லுங்கள். கூட்டம் கூட்டமாக செல்ல இது சுற்றுலா கிடையாது. குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என்று சொல்வார்கள்.

கரோனா வைரஸை தடுப்பதற்கு அடுத்த 2 வாரங்கள் முக்கியம் என்று சொல்கிறார்கள். எச்சரிக்கையோடு இருப்போம் என அறிவுரை வழங்கினார். சம்பத்தில் கமல் ஹாசன், ஷாருக் கான் போன்ற நடிகர்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா சோதனை மையங்கள் அதிகரிப்பு!

Quick Share

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மகராஷ்டிராவில் 52 பேருக்கும் கேரளாவில் 40 பேருக்கும் உத்தரபிரதேசத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இந்த மூன்று பேருடன் தொடர்பில் இருந்த 84 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

கொரோனா அறிகுறிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரிகள் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வந்தன. திருநெல்வேலி, தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ஒரு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது மேலும் இரு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையை பொறுத்தவரை தினமும் சுமார் 150 பேர் கொரோனா சோதனைக்காக வருகை தருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்படுவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக இந்த சோதனை மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர் வரை மூட்டுவலி வரக் காரணம் என்ன?

Quick Share

இன்று மூட்டுவலி பள்ளிக்குச் செல்லம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாண அனைவருக்கும் இந்த நோய் தீவிரம் அடை அவர்களுடைய மூட்டுகளில் வலி ஏற்பட்டு நடக்க முடி நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

நடக்க முடியாத இதற்கு என்ன காரணம்? என்று ஆராயும் போது சிகிச்சை முறைகள் இன்று உலகத்தில் எல்லாம் உணவுகளிலும் கலப்படம் அதிகரித்து விட்டது.

கலப்பட உணவுகளை மனிதன் சாப்பிடுவதினால் அவனை அறியாமலேயே அவன் உடலில் ஒத்துக் கொள்ளாத விஷப் பொருள்கள் அணு அணுவாக உள்ளே மறைமுகமாக சேர்ந்து வருகின்றது.

தண்ணீரில் கலப்படம், சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. சுற்றுச்சூழல் மாசு அடைந்துவிட்டது. கத்தமில்லாததினால் சுகாதார கேடு தலை விரித்து ஆடுகிறது. காற்று அசுத்தம் அடைகிறது. அசுத்த காற்றையே நாம் சுவாசிக்கின்றோம்.

பாட்டிலில் அடைத்து விற்கும் தண்ணீரை வாங்கி குடிப்பதுபோல இனி வருங்காலத்தில் பாக்கெட்டுகளில் சுத்தமான காற்று அடைத்து விற்பனைக்கு கொண்டு ட வருகின்றார்கள். அதை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்க இவ் வேண்டிய நிலை வெகு சமீபத்தில் உள்ளது.25 ஆண்டுகளுக்கு முன்பு இளம் பிள்ளை வாதநோயை உருவாக்கிய நஞ்சு நுண் கிருமிகள் ஒழிக்கப்பட்டது. இந்த கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் இப்போது சக்தி குறைவாக உள்ளவர்களெல்லாம் பீடிக்கச் செய்து அந்த நஞ்சு நுண்கிருமிகள் மூட்டுகளை தாக்கி மூட்டு வலி ஏற்படுத்தி வருகிறது.

நெஞ்சு எரிச்சலால் மாரடைப்பு வருமா ? அலட்சிய படுத்தாதீர்கள்.., விளைவுகள் பயங்கரம் !!

Quick Share

இன்றைய உணவு பழக்கங்களால் பலருக்கு நெஞ்சு எரிச்சல் வருவதுண்டு. அதில் சிலர் நெஞ்சு எரிச்சலால் மாரடைப்பு என மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மருத்துவர்கள் சிகிச்சையை மேற்கொள்ளும்போது, அதாவது ECG டெஸ்ட் செய்யும் போது, ஆபத்து எதுவும் இல்ல என ரிசல்ட் வரும். இவ்வாறு வந்தால் பிரச்சனை தங்களுடைய வயிற்றில் என்பதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.

நெஞ்சு எரிச்சலை உதாசீனப்படுத்தாதீர்கள். இதை உதாசீனப்படுத்தினால் மாரடைப்பு வரும் என்பது உண்மை தான். ஆகவே நெஞ்சு எரிச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்வது நல்லது. பரிசோதனை செய்து கொண்டால் தங்களுடைய நிலைமையை அறிந்து கொள்வீர்கள்.

விபரீத ஆசை போயும் போயும்… “அந்த இடத்திலா டாட்டூ குத்தலாமா??

Quick Share

ரோக்லாவ் நகரை சேர்ந்த அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இனம் பெண், மாடலாகவும், ராப் இசை பாடகராக இருக்கிறார். ஃபைட்டரான போபெக்கின் ரசிகையாக இருக்கும் இவர் போபெக் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை போட்டுள்ளதைப்போலவே தானும் கண்ணில் டத்தோ போட ஆசைப்பட்டார். இந்நிலையில் அதேபோன்று தனக்கு கண்ணில் டாட்டூ போட வேண்டும் என எண்ணிய அந்த இளம் பெண் , ஒரு டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார்.

கண்ணில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத அந்த நபர், பணத்திற்காக அவர் தான் டாட்டூ போடுவதாக பொய் கூறி அலெக்சாண்ட்ராவிற்கு டாட்டூ போட்டுள்ளார். கண்ணில் கருமை நிறத்தை வைத்து டாட்டூ போட்டு முடித்தவுடன், இரண்டு கண்களும் அதிகமாகி எரிச்சலாக இருப்பதாகவும், வலிப்பதாகவும் அந்த பெண் சொல்லியுள்ளார்.ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் சொன்ன அந்த நபர், வலி மருந்து கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தனது இடது கண் பார்வையை அந்த பெண் இழந்துள்ளார். உடனே டாக்டரிடம் அப்பெண் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் கண்ணில் கருமை நிற டாட்டூ பரவியுள்ளது, அதனை சரி செய்ய முடியாது என தெரிவித்ததுடன், வலது பக்க கண்ணிலும் பார்வை போக வாய்புள்ளது என கூறியுள்ளார் டாக்டர் சொன்னதைப்போகவே வலது கண் பார்வையும் பறிபோயுள்ளது..

அரியலூரில் சக மாணவிகளுக்கு ஊத்தி கொடுக்கும் கலாச்சாரம்…, மதுவால் சீரழியும் மாணவிக...

Quick Share

சமீபகாலமாக மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தற்போது அரியலூரில் மாணவிகள் சிலர் கூட்டாக வெட்ட வெளியில் உட்கார்ந்துகொண்டு பீர் பகிர்ந்து குடிக்கும் வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 12 வகுப்பு மாணவிகள் 5 பேர் கையில் பாட்டிலோடு மதுவை பகிர்ந்து குடித்தனர். இந்த வீடியோவை வாட்ஸாப் மற்றும் ட்விட்டரில் வேகமாக பரவிவருகிறது. தங்கள் வீட்டு பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் பெற்றோர்களிடையே இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை கொடுக்கிறது.

“இந்தியன் 2” படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் திடீர் திருப்பம் !!

Quick Share

சென்னை பூந்தமல்லியை உள்ள நசரத்பேட்டையில் உள்ள EVP Film சிட்டி இந்தியன் 2 படப்பிடிப்பு தலத்தில் விபத்து ஏற்பட்டது. பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நரசத்பேட்டை போலீஸார், கிரேன் ஆபரேட்டரை வெள்ளிக்கிழமை 21 தேதி கைது செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசனுடன் போலீஸ் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த விபத்து தொடர்பான வழக்கை, நசரத்பேட்டை போலீஸாரிடமிருந்து மத்திய குற்ற பிரிவு போலீஸாருக்கு மாற்றி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று 21 தேதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை குற்ற பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




You cannot copy content of this Website