சரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..!
நடிகர் விஷ்ணு விஷால்விஷால் அடிக்கடி தன்னுடைய அபார்ட்மெண்ட் வீட்டில் பார்ட்டி நடத்துவதாகவும், குடித்துவிட்டு அதிகம் சத்தத்துடன் பாட்டு கேட்பதால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் தூக்கம் கெடுவதால் விஷ்ணு விஷாலிடம் சென்று கூறுபவர்களை அவர் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால். தன்னை இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றே அந்த தொழிலதிபர் இது போன்ற புகாரை கொடுத்துள்ளதாகவும், தான் ஒரு சினிமாக்காரன் என்பதால் தன்னை சந்திக்க பலர் வருவது சகஜமான ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும் பெரிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
தினமும் படப்பிடிப்பில் 300 பேர் உடன் பணியாற்றுவதால் பாதுகாப்பு கருதி வீட்டில் தங்காமல் தனியே வாடகை வீட்டில் தங்கியுள்ளேன். நான் தயாரித்து வரும் எஃப்ஐஆர் படத்திற்காகவும் பலரையும் சந்தித்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நேற்று முதலே என் மீது குற்றச்சாட்டி வருகிறார்.
ஆனால் அவர் தான் என்னை சந்திக்க வந்த பணியாளர்கள், விருந்தினரிடம் தவறாக நடந்து கொண்டார். எனது கேமராமேன் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஆல்கஹால் பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் நான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதால் மது அருந்தவில்லை. ஆனால் எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. போலீசிடம் நான் அமைதியாகவே பேசினேன்.
நேற்று நான் பேசிய வீடியோ மட்டுமே நேற்று வெளியானது. அவர் தவறாக பேசியதால் தான் நான் கோபப்பட்டு பேசினேன். எந்த மனிதனும் கெட்ட வார்த்தையை பொருத்துக்கொள்ள மாட்டான். குடிகாரன், கூத்தாடி என்று சித்திரிக்கப்படுவதையும்,நான் சார்ந்த சினிமா துறையை விமர்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.