நடிக்க ‘யாரும் வாய்ப்பு தருவதில்லை’ – நடிகர் வடிவேலு உருக்கம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இவரின் தற்போதைய புது படங்களை எதுவும் பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
பல்வேறு துறையினர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவினர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி என அது சொல்லப்படுகிறது.
அப்போது பேசிய வடிவேலு ‘நீங்கள் எல்லாம் ஒரு வருடமாகதான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். ஆனால் நானோ 10 வருடமாக இருக்கிறேன்.
என் உடம்பில் இப்போதும் தெம்பும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை.’ என பேசினாராம்.
அதே போல சோகத்தோடு கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடியதாக சொல்லப்படுகிறது.