ஆச்சரியத்தில் பாலிவுட் – ரூ.22 கோடிக்கு ஆடம்பர பங்களாவை வாங்கிய தீபிகா படுகோன்.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் நடிகர் ரன்வீர் சிங் – நடிகை தீபிகா படுகோனே. காதலித்து, மணந்து கொண்ட இவர்கள் சினிமா, விளம்பரம் என பிஸியாக உள்ளனர். மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர். 13ம் தேதி இந்த சொத்திற்கான பத்திரபதிவு நடந்துள்ளதாம்.
ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் ரூ1.32 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்கரை பகுதியாக இந்த ஏரியா இருப்பதால் பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த ஏரியாவில் இதுபோன்று சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.
தற்போது மும்பையில் பிரபாதேவி பகுதியில் 4 மாடி கொண்டு குடியிருப்பில் தீபிகா, ரன்வீர் வசித்து வருகின்றனர். இந்த சொத்துக்கள் தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.