தஞ்சாவூரில் இரண்டு பொண்டாட்டி இல்லாத வீடே இல்லை..! வனிதாவுக்கு ஆப்பு வச்ச பாஜக கட்சியினர்!

January 8, 2021 at 12:17 pm
pc

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் அணைத்து ஊரடங்களிலும் அதிகம் பேசப்படும் ஒரு ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. உலகில் ஆயிரம் விஷயம் நடந்து வருகிறது, கொரோனாவால் 100 க்கணக்கான உயிர்கள் போகிறது, அதையெல்லாம் பற்றி பேசாதவர்கள் இப்போது வனிதாவின் பிரச்னையை ஆன்லைன் மூலம் கூடி விவாதித்து வருகிறார்கள்.

மேலும் வனிதாவும், முறையாக விவாகரத்து வாங்காத ஒருவரை திருமணம் செய்தது தவறு என்று கூட உணராமல் பல்வேறு காரணம் கூறி வருகிறார்.

குறிப்பாக இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தஞ்சாவூர் மக்களை விமர்சிக்கும் விதமாக, சர்ச்சையாக பேசினார்.

தன்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் தான் என்றும், அங்கு இரண்டு மனைவிகள் இல்லாத வீடே கிடையாது. தன்னுடைய தந்தைக்கு கூட இரண்டு மனைவிகள் தான் என கூறினார்.

அதே போல், இதனை அங்கு இருப்பவர்களிடம் கூறினால் இதெல்லாம் ஒரு விஷயமா என கேட்பார்கள். இதில் என்ன தவறு உள்ளது என தன்னுடைய தவறை மறைத்து, தன்னை நியாயப்படுத்தினார்.

இவரின் இந்த கருத்துக்கு தான், பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கூட தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம், வனிதாவுக்கே எதிராக திரும்பியுள்ளது.

வனிதா தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியுள்ளதாக கூறி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பிஜேபி கட்சியை சேர்ந்த சிலர் வனிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

அதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை, அவமதிக்கும் நோக்கத்தில் பேசியுள்ள வனிதா மன்னிப்பு கூறவேண்டும் என்றும், இந்த கருத்தை அவர் திரும்பபெறவில்லை என்றால் அவரை எதிர்த்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website