பத்மபூஷன் விருதை திரும்ப கொடுக்கவிருக்கும் இளையராஜா!

January 19, 2021 at 9:46 am
pc

மத்திய அரசின் உயரிய கவுரவமான பத்மபூஷன் விருதை இசைஞானி இளையராஜா திரும்பக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து ஸ்டூடியோவிலிருந்து காலி செய்ய பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றால் ஸ்டூடியோவில் பொருட்களை எடுக்க அனுமதி அளிப்பதாக பிரசாத் ஸ்டூடியோ அறிவித்தது . இதை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இளையராஜா தனது பொருட்களை எடுக்க இருந்த அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு அவரது பொருட்கள் இல்லை என்பதால் வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்தார். அவரது அறையில் இடிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இசைக்காக வாழ்ந்துவரும் இளையராஜா பற்றி பற்றி தவறாக கூறுவது வேதனை அளிப்பதாக திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா தெரிவித்துள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இடத்தை கேட்கிறார் என்பது தவறான தகவல் என்றும், பத்மவிபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இருப்பதாக இளையராஜா கூறியிருக்கிறார் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website