ஷில்பா ஷெட்டியின் கணவர் மீது பாய்ந்த ஆபாச வழக்கு – முழு விவரம்

August 2, 2021 at 10:53 pm
pc

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமின் பெறுவதற்காக தொடர் முயற்சியில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வருகிறார். அவரது இடைக்கால ஜாமின் மனு மீதான விசாரணை மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை சேகரித்துள்ளனர். தனது கணவர் ஒரு அப்பாவி என்றும், அவர் ஆபாச படங்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. 

பாலியல் ஆசையை தூண்டும் படங்களே எடுத்தார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அதில், மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் இரண்டு ‘ஹாட்ஷாட்’ செயலியில் இருந்து 51 ஆபாசப் படங்கள் கைபற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராஜ் குந்த்ரா தன்னிடம் உள்ள 119 வீடியோக்களை விற்க வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் சுமார் ரூ.10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியிருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். எனவே, ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website