கொரோனா பாதிப்பால் இத்தாலி, தென்கொரிய உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விசா ரத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

March 3, 2020 at 11:45 pm
pc

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் இன்று மத்திய அரசு இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே சீனர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டதும் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்தது.

உலகம் முழுவதும் 50கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் தொற்றியுள்ளது. பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தென்கொரியா, இத்தாலி, ஈரான் மற்றும் ஜப்பான் நாடுகளில் முக்கிய அதிகாரிகள் இந்தியா வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் இந்தியா வர விரும்பினால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும், அதேநேரத்தில் போதுமான மருத்துவ பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து யாரும் இந்தியா வர வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் கேட்டுக்கொண்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website