குரங்கை மதுவுக்கு அடிமையாக்கி விட்ட நபர்.., வெறிபிடித்து குரங்கு செய்த வேலை
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல கோடிக் கணக்கானோர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக இளைஞர்கள் மதுவின் மீது ஆசைகொண்டு பிறகு அதற்கு அடிமையாகி விடுகின்றனர். அது தற்போது மனிதர்களையும் தாண்டி விலங்குகளையும் சென்றடைந்து விட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தில் குரங்குக்கு ஒருவர் மது கொடுத்து பழக்கப்படுத்தி மதுவுக்கு அடிமையாகி விட்டார். குரங்குக்கு “காலியா” என்றும் பெயர் சூட்டி தான் கொடுக்கும் மதுவை கொஞ்சம் ஊற்றி கொடுத்து வளத்துள்ளார். இதனால் குரங்கும் மதுவுக்கு அடிமையானது.
மது இல்லாவிட்டால் அமைதியாக இருக்கமுடியாது என்ற நிலைக்குக் குரங்கு தள்ளப்பட்ட போது, குரங்கின் உரிமையாளர் இறந்த பிறகு குரங்கின் நிலைமைதான் பரிதாபமாகிப்போனது. மது கிடைக்காமல் வெறிகொண்ட குரங்கு போவோர் வருவோரைக் கடிக்கத் தொடங்கியது. வெறிகொண்ட குரங்கால் 200க்கும் மேற்பட்டோர் கடிபட்டுள்ளார். குரங்கு கடித்ததில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மிர்சாபூர் மக்கள் இந்தக் குரங்கைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
ஒரு கட்டத்தில் வனத்துறையினர் “காலியா” குரங்கைப் பிடித்து அடைத்தனர். தற்போது உத்திரப்பிரதேசம், கான்பூர் வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் உள்ளது குரங்கு.
இந்தக் குரங்கைப் பராமரிக்கும் கால்நடை மருத்துவர், “பல விசியங்களை செய்து பார்த்தோம் எப்போதுமே மிகுந்த வெறியோடு தான் இந்தக் குரங்கு இருக்கிறது. அதன் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. மூன்று ஆண்டுகளாக மருத்துவம் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மூன்று ஆண்டுகளாக உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டிருப்பவரிடம் கூட இந்தக் குரங்கு அன்பாகப் பழக்கவில்லை.
தற்போது கலுவா குரங்குக்கு ஆறு வயதாகிறது. தற்போதுள்ள சூழலில் குரங்கை வெளியே விட முடியாது. அப்படி விட்டால் அனைவரையும் கடித்துக் குதறிவிடும். அதனால், இனி இந்தக் குரங்கைத் தனிக் கூண்டில் அடைத்துவைத்துப் பராமரிக்க முடிவெடுத்துள்ளோம். அதன் எதிர்காலம் இனி கூண்டுக்குள் தான்” என்று கூறியிருக்கிறார்.
ஜாலியாக இயற்கையில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு திறந்த குரங்கைப் பிடித்து மதுவுக்கு அடிமையாக்கிய மனிதன் போய்ச் சேர்ந்துவிட்டான். தற்போது மது கிடைக்காததால் வெறி பிடித்து கம்பிகளுக்குள் கலுவா கடினமாக நேரத்தை சந்தித்து வருகிறது.