ரத்த பாசம் கூட இல்லாத மகன்., தாயை கொடூரமாக கொலை செய்த காரணம்

இந்தியாவில் ஜெய்ப்பூரை பகுதியை சேர்ந்தவர் சுமன் செளத்ரி (வயது 38). இவருக்கு பங்கஜ் (20) என்ற மகனும்,
ஒரு மகளும் உள்ளனர். சுமன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் குடும்பத்தாரை பிரிந்து
விட்டார்.
இதையடுத்து தனது மகன் பங்கஜுடன் தனியாக வசித்து வந்தார். “சுமன் வசிக்கும் வீட்டின் அருகில் மட்டாதீன் என்ற மருத்துவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சுமனுக்கும், மட்டாதீனுக்கும் பழக்கம்
ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்த நிலையில் அதை பங்கஜ் கண்டுபிடித்து தாயை கண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று மட்டாதீன் வீட்டுக்கு ரகசியமாக சென்ற சுமன் அவரை சந்தித்துள்ளார். அப்போது அங்கு சென்ற பார்த்த பங்கஜ் ஆத்திரமடைந்த நிலையில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் இருவரையும் சரமாரியாக சுட்டு கொன்றுள்ளார். பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து நமது அம்மாவை கொன்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார் பங்கஜ். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பங்கஜ் சகோதரி காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு சடலங்களையும் காவல் துறை கைப்பற்றினார்கள். பங்கஜை தேடி வருகின்றனர் மேலும் துப்பாக்கி எப்படி கிடைத்து என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.