உங்கள் மானத்தை வாங்குவோம் !! மெசேஜ் வெளியே சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

January 8, 2021 at 12:33 am
pc

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
விவேக தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக. தனியார் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி உள்ளார்.

ஆன்லைன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஆனால் இந்த கடனை செலுத்த காலதாமதம் ஆகி இருக்கிறது. கடன் கொடுத்த அந்த நிறுவனம் கஸ்டமர் கேர் மூலம் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களை பற்றி அவதூறாக குறுஞ்செய்தியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மானத்தை வாங்கி விடுவோம் என எச்சரித்துள்ளார்கள்.

இந்த ஆன்லைன் நிறுவனம் குறுஞ்செய்தியை இவருடைய நண்பர்களுக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர் இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்கிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர் இதனால் மனமுடைந்த விவேக் பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவமானம் தாங்கமுடியாமல் இளைஞர் தற்கொலையோ செய்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website