ஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்து வந்த இளைஞன்!

March 4, 2021 at 6:31 am
pc

உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அதைப் படமாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக Chandrama Rajbhar (24) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி Sukhpura பொலிஸில் புகார் அளித்ததையடுத்து, Chandrama மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் மற்றும் I.T சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி, தனது புகாரில், கடந்த ஒரு வருடத்தில் Chandrama Rajbha தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவித்தால் தனக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார், இது குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website