கஞ்சா அடித்து விட்டு போதையில் அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற வாலிபர்..!! அதிர்ச்சி சம்பவம்

January 8, 2021 at 12:51 am
pc

கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்தை அதன் டிரைவர் சரவணக்குமார் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்று இருக்கிறார்.
உடன் இருந்த கன்ட்ரக்டர் நேரக்கண் காணிப்பாளர் அறைக்கு சென்றிருந்த நிலையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அஜித்குமார் (32) என்ற வாலிபர் பேருந்தில் ஏறி டிரைவர் இல்லாததைப் பார்த்து திடீரென டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்து ஒட்டியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன பார்த்த சரவணக்குமார் கத்திக் கொண்டே பஸ்ஸை துரத்திப் சென்று பிடித்துள்ளார்.

அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அஜித்குமார் போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு தான் கஞ்சா அடித்துவிட்டு போதையில் இப்படி செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டுநர் பிடித்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. போதையில் இருந்த அஜித்குமாரைத் தற்போது போக்குவரத்து போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website