கல்யாணம் – கடைசி இரவு கள்ளகாதலியோடு அனுபவிக்க சென்ற புது மாப்பிளை -வெச்சி செய்த கள்ளகாதலி.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார். இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இதையடுத்த், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சதீஷ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
இதன் காரணமாக கள்ளக்காதலியுடன் சதீஷ்குமார் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராதா திருமணத்திற்கு முதல் நாளான இரவு சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு வா என்று அழைத்துள்ளார்.
அதன்பின்னர், சதீஷ்குமார் நள்ளிரவு ராதா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கேயே அவர் அயர்ந்து தூங்கி விட்டார்.
அப்போது திடீரென எழுந்த ராதா, நன்கு தூங்கி கொண்டிருந்த சதீஷ்குமார் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் சதீஷ்குமாரின் உடலில் தீப்பற்றி எரிந்து, வலி தாங்கமுடியாமல் அலறல் சத்தம் போட்டுகொண்டு வெளியே ஓடி வந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமார் மீது எரிந்த தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதனையடுத்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சதீஷ்குமாருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதனை அறிந்த ராதாவின் கணவன் ஜெயக்குமார் ஏற்கனவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பிறகும் இருவருக்குமிடையே கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. மேலும் வேறு ஒரு பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு திருமணம் நடைபெற இருந்ததுள்ளதால், இனிமேல் சதீஷ்குமார் நமக்கு கிடைக்க மாட்டார் என்ற விரக்தியிலும், சதிஷ்குமாரால் தான் நான் என் கணவரை இழந்தேன் என்ற வேதனையிலும் சதீஷ்குமார் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.