கெஞ்சியும் மதிக்காாமல் இருந்த பெண்: பிளேடால் கழுத்தை அறுத்த காதலன்.
காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் பிளேடல் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அச்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் வசித்து வந்துள்ளார். இப் பெண்ணின் தந்தை ஆயுர்வேத மருந்து விற்பனையாளராக இருந்து வருகிறார்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இப்பெண் தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன், அவ்வப்போது பெற்றோர்களை சந்தித்து சந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தனது பெற்றோர்களை சந்திக்க வந்தபோது, உள்ளூர் வாலிபரான பதுலா பால சயீத் (23) என்ற இளைஞன் அந்தப் பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் இளைஞரை கண்டுகொள்ளாமல் இருந்ததுடன், தனக்கு வேறொருவருடன் நிச்சயம் நடைபெற்று விட்டதாகவும் கூறறியுள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் தோழியுடன் துணி துவைக்க வந்த அவரிடம், மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான். ஆனால் அந்த பெண் அதை ஏற்கவில்லை, இதனால் தன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் அந்தப் பெண்ணின் கழுத்தை இந்த இளைஞர் கரகரவென அறுத்தார்.
இதைகண்ட தோழி அலறல் சத்தம் கேட்டு பொதுமக்களை அழைத்த போது இளைஞர் அங்கிருந்து தப்பியுள்ளார். குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஹீசூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பெண் ஆபத்தான் கட்டத்தை தாண்டி விட்டதாகவும், தொடர்ந்து தலைமாறைவாக உள்ள அந்த இளைஞரை தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.