சென்னையில் குளிக்கும் இளம்பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ..

February 26, 2020 at 1:05 am
pc

சென்னை அய்யானவரத்தில் கடந்த 5 ம் தேதி , வீட்டில் உள்ள பாத்ரூமில் , மூத்த மகள் குளித்துக் கொண்டு இருக்கும் போது , பாத்ரூம் ஓட்டை வழியாக யாரோ வீடியோ படம் எடுப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும், உடனடியாக சென்று பார்க்கும் போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத் என்பவர் செல்போனில் படம் பிடித்தது தெரிய வந்துள்ளது.

அந்த இடத்திலிருந்து வினோத் தப்பிச் செல்லும்போது , வினோத்திடமிருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டேன். பின் தனது கணவருடன் சென்று வினோத்திடம் விசாரணை செய்யும்போது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணை நடத்தியதில், புகார் உண்மை என தெரியவந்துள்ளது. வினோத் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் வினோத்தின் செல்போனை ஆய்வு செய்ததில் பல ஆபாச வீடியோக்களும் குளியலறை வீடியோக்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவரான வினோத்தை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website