சென்னையில் சில நாட்கள் சிங்கப்பூரில் சில நாட்கள் – தமிழகத்தில் ரெட் லைட் கலாச்சாரத்தை உருவாக்கும் ரவுடி பேபி சூர்யா?
டிக்டாக்கில் கவர்ச்சியாக நடனம் ஆடி பிரபலமாகியவர்களின் பட்டியலில் ரவுடி பேபி சூர்யாவுக்கும், லக்கி இலக்கியாவுக்கும் முக்கிய இடம் உள்ளது. தமிழகத்தில் டிக்டாக்கை தடை செய்யக்கோரி எழுந்த கண்டனங்களில் ஆணி வேறாக இருந்த்தவர்களில் இவர்களும் உண்டு.
நாடு முழுக்க டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னரும், யூடியூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டு இருக்கும் இந்த நிலையில், விபச்சார தொழில் சம்மந்தமாக பேரம் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது ரவுடி பேபி சூர்யா, ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலியான மசாஜ் சென்டர்களை இயக்கி அதில் ஏழை குடும்ப பெண்களை வேலைக்கு அமர்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.
அந்த சோதனையில் டிக்டாக் புகழ் சூர்யா (34), கீரனூரைச் சேர்ந்த புரோக்கர் தினேஷ் (24), உல்லாசத்துக்கு வந்திருந்த 8 ஆண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் 12 பேர் என அனைவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் பாலியல் தொழிலை நடத்தி வந்த ரவுடி பேபி சூர்யா, புரோக்கர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் இருந்து சூர்யா எப்படி தப்பினார் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. சென்னையில் சில நாட்கள் சிங்கப்பூரில் சில நாட்கள் என்று விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் பாலியல் தொழில் தடை செய்யப்பட்டு இருக்கும் நிலையில், வெளிப்படையாகவே இவர் செய்து வருகிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.