தந்தை கண்முன்னே துடிதுடிக்க மகனை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!

April 10, 2021 at 7:49 am
pc

சென்னையில் உள்ள நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரம்மதேவன். இவரது மகன் நாராயணன் (வயது 23). நாராயணனன் பாலிடெக்னீக்கில் படித்து வந்த நிலையில், படிப்பை பாதியிலேயே விட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, திண்டிவனம் பகுதியில் உள்ள உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து வருகின்றார். இந்நிலையில், தனது தம்பியின் பிறந்த நாளினை கொண்டாட சென்னைக்கு நாராயணன் வந்திருந்துள்ளார்.

நேற்று இரவு வீட்டருகே உள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு சாலையோரமாக நடந்து சென்ற நிலையில், ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரம்மதேவன் கண் முன்னே அவரது மகன் நாராயணனை வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் நாராயணனிற்கும் – ரவுடி தன ஜெயன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், இதனால் இக்கொலை அரங்கேறியுள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website