திருநங்கையின் கொடூர செயல் – பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த கொடூரம்.

July 12, 2021 at 10:05 am
pc

மராட்டிய மாநிலத்தில் கேட்ட பணம் கிட்டாத நிலையில், ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் பிறந்து 3 மாதங்களேயான பிஞ்சு குழந்தையை உயிருடன் புதைத்து கொன்றுள்ளார். மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளிலும், குழந்தை பிறந்தால், திருநங்கைகளை அழைத்து, குழந்தையை ஆசீர்வதிக்க வைத்து, அவர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கனூ என்ற திருநங்கையும் அவரது தோழிகளும் சம்பவத்தன்று பெண் குழந்தை பிறந்த குடியிருப்புக்கு சென்று 2,000 ரூபாய் மற்றும் புடைவை வேண்டும் என கேட்டுள்ளனர்.

ஆனால், மாலை நேரம் குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு இருப்பதாக கூறி, அப்போது வர வேண்டும் என அந்த வீட்டார் கூறியுள்ளனர்.

இது ஒருகட்டத்தில் வாக்குவாதமாக மாற, ஆத்திரமடைந்த திருநங்கைகள் சாபமிட்டு சென்றுள்ளனர். அதே நாள் இரவு, குழந்தையை கடத்திச் சென்ற கனூ, உயிருடன் புதைத்துள்ளார்.

குழந்தை மாயமான தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்த, சந்தேகத்தின் பேரில் கனூவை விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website