தில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லையும் திருட்டு
துபாயில் இருந்து தமிழம் வரும் பயணிகள் பல வகைகளில் தங்கங்களை கடத்தி வருவதாக தகவல் சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதன் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன் சென்னையில் வயிற்றில்
தங்கத்தை கடத்தி வந்தனர். தகவலின் பேரில் சோதனையை தீவிரப்படுத்திய சுங்க அதிகாரிகள் சென்னை, திருச்சி
விமான நிலையங்களில் இதுபோன்ற நபர்களை குறிவைத்து பிடித்து தங்கத்தை பறிமுதல்
செய்து வருகின்றனர்.
24ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த ஐந்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் சிகரேட், லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மலக்குடலில் 18 பொட்டலங்களில் தங்கத்தை மறைத்து வைத்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.