தொல்லை கொடுத்து டீச்சரை வழிமறித்து சீண்டிய மாணவன்…,
திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்… இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். அந்த பேராசிரியருக்கு 29 வயதாகிறது. ராஜேஷ் எல்லை மீறி அநாகரிகமாக பேராசிரியருக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்..
பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த டீச்சரும் அமைதியாக இருந்துள்ளார். ஒருநாள் போன் செய்து, நாம ஜாலியா இருக்கலாம் என்று கூப்பிடவும்தான் அதிர்ந்து போய்விட்டார். அதனால், அந்த பேராசிரியை ராஜேஷூடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று காலேஜ் முடிந்து, பேராசிரியை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின் ராஜேஷ் சென்றார். குனிச்சி என்ற பகுதி அருகே வரும்போது, பேராசிரியரை வழி மடக்கி விட்டார். மறுபடியும் அவரை
உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார். பேராசிரியை மறுத்து விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ராஜேஷ், உன்னை இப்படியே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.நகர விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியும் உள்ளார்..
பேராசிரியை கத்தி கூச்சலிடவும், அந்த பகுதியில் சென்றவர்கள் ஒன்றுகூடி ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பேராசிரியை கந்திலி ஸ்டேஷனில் புகார் தந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர். படிக்கும் கல்லுரியில் பேராசிரியரை தவறாக அழைத்தது வேதனைக்குரிய செயலக மாறியுள்ளது.