போதைக்கு அடிமையாக்கி கள்ள காதல்.., 35 வயது பெண் செய்த காரியம்

January 8, 2021 at 12:26 am
pc

தமிழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்தவர் தியாகு (36) கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் கண்டித்துள்ளார். இருவரும் தொடர்பை கைவிடவில்லை. தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர்.

கணவரை பிரிந்த பின்னர் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்தனர், தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் குடிக்கு அடிமையாகி உள்ளனர். தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி குடிப்பதை கைவிட வில்லை. மனநலம் பாதித்தவராக மாறியுள்ளார்.தியாகு மது வாங்கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை போதைக்கு அடிமையாக்கி வாழ்க்கையை சீரழித்து கொண்ட சம்பவம் குடும்பத்திற்கு வேதனையை தந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website