மூடி மறந்துவிட்டார்கள் !! லலிதா ஜூவல்லரி விவகாரம் இறுதியில் எப்படி பைசல் செய்தாங்க பாருங்கள்..

January 8, 2021 at 12:31 am
pc

2018ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கர்ப்பினியாக இருந்த தன் மனைவியின் வளைகாப்புக்காக நகை எடுத்துகொடுக்க லலிதா ஜூவல்லரிக்கு சென்றுள்ளார் ஹரிஹர ஐயப்பன். வைர நகையை செலக்ட் செய்த தம்பதி அது விலை அதிகம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பின்னர் தங்க நகைகள் வாங்கிச்சென்றுள்ளனர். இத்தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்து, இப்போது அக்குழந்தைக்கு இரண்டு வயதாகிறது.

வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றிருக்கிறார். அங்கு வாங்கிய எடையில் பாதி தங்கம்தான் மதிப்பிட்டிருக் கிறார்கள். மீதம் எல்லாம் என்னவானது என்று பார்த்தால் தங்கத்திற்கு பதிலாக மெட்டல் வைத்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், லலிதா ஜூவல்லரி நகைகளில் வேக்ஸ் அதிகமாக வைக்கப் பட்டிருக்கிறது.

மேலும், சில கற்களுக்கு கீழே வேக்ஸுக்கு பதிலாக மெட்டல் வைத்து மோசடி செய்திருக்கிறார்கள். அதாவது 7 சவரண் தங்க நகையில், 56 கிராம் நகையில் 24 கிராம் மெட்டல் இருப்பது கண்டு அதிர்ந்து போனவர், நேரே லலிதா ஜூவல்லரிக்கு சென்று, எல்லா கடையிலும் வாங்க வேண்டாம். நீங்க உழைச்ச காச ஏமாந்துடாதீங்க. இங்க வாங்கன்னு உங்க ஓனர் விளம்பரம் செய்யுறார். நானும் எல்லா நகையையும் இங்கதான் வாங்குனேன். பணம் இல்லாத நேரத்திலும் மனைவியின் வளைகாப்புக்காக கடன் வாங்கி வந்து நகை வாங்குனேன். இப்படி நாங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்து வாங்குறதுல மோசடி பண்றீங்களே.. நீங்க திங்குற சோறு செரிக்குமா? என்று ஆவேசமாக கத்துகிறார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் பேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு, அவர் கேள்வி கேட்பதால், கடையில் நிர்வாகி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த விசியம் எப்படி பைசல் செய்யப்பட்டது என்பதன் வீடியோ வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website