வெல்டிங் தொழிலாளி wedding சோகத்தின் முடிந்த பரிதாபம்

January 8, 2021 at 12:30 am
pc

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் வெல்டிங் வேலை செய்துவருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ராஜ்குமார் திருமணம் செய்துகொண்டார்.

வீட்டில் தனிக்குடித்தனம் போவது குறித்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் வாசலில் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவலறிந்த ஆழ்வார் குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான், தனிக்குடினத்தனம் செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜ்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமான 2 மாதத்தில் இப்படி இளைஞர் செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website