15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தமிழ் இளைஞன்!

May 10, 2021 at 9:32 am
pc

தமிழகத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட இலங்கை முகாமை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவர் 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். அச்சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்துள்ளனர்.

மேலும் சூர்யா மனைவியான 15 வயது சிறுமி அவரிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website