“16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ” – விசரணையில் அம்பலமான உண்மை சம்பவம்…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள தனது அக்கா பொன்னி வீட்டில் தங்கி, தையல் பயிற்சி பெற்று வந்துள்ளார் அவரது தங்கை 16 வயது சிறுமி.
சிறுமியின் அக்கா பொன்னி – மோகன் தம்பதியருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ள்ளது.
இந்நிலையில், தனக்கு குழந்தை இல்லாததால் தனது கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க எண்ணிய நிலையில் கணவன் மோகன் கடந்த ஜூன் மாதம் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அக்கா கணவரின் தொல்லை அதிகரிக்கவே அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சிறுமி தனது தாயாரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய், சாலவாக்கம் போலிஸில் புகார் அளித்துள்ளார். போலிஸார் நடத்திய விசாரணையில், அம்பலமானது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் மோகன் மற்றும் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொன்னி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.