16 வயது சிறுமியை கல்யாணத்தில் சீரழித்த சிறுவன்.

June 15, 2021 at 6:08 am
pc

மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை மயக்கமருந்து கொடுத்து கடத்தி, சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால், 6 மாதத்துக்கு பிறகு சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அவள் கர்பமாக இருக்கிறாள் என தெரியவந்த பிறகு இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, கடந்த ஆண்டு டிசம்பரில் போபாலில் உள்ள நசிராபாத்தில் இருக்கும் தனது பாட்டியின் வீட்டிற்கு, ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்ததார். விழாவில் கலந்து கொண்ட ஒரு சிறுவன், அவளுக்கு மயக்க மருந்து கலந்த தேனீரைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தேநீர் அருந்தியபின், சிறுமி தன் சுயநினைவை இழந்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுவன் அவளை ஒரு வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அச்சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் அவர் தனது அடிவயிற்றில் வலி இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அங்கு அச்சிறுமி உண்மைகளை உடைத்த பிறகு, மருத்துவமனை மூலமாக பிப்லானி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிப்லானி பொலிசார் ஒரு ஜீரோ எஃப்.ஐ.ஆரை பதிவு செய்து வழக்கை பெரேசியா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர், அங்கிருந்து நசிராபாத் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நசிராபாத் பொலிசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website