42 வயது பெண்ணுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்த 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி! நடந்த விபரீத சம்பவம்..

January 8, 2021 at 12:52 am
pc

தமிழகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த இளைஞனை 42 வயது பெண் சரமாரிய கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப். 24 வயதான இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர் வீட்டின் அருகே பிரமிளா என்ற 42 வயது பெண் வசித்து வருகிறார். பிரமிளாவின் கணவர் ராஜேஷ் 6 ஆண்டுகள் முன்பு உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து தற்போது அவர், கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு, பிரதீப் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது.

இது குறித்த தகவல் பிரதீப்பின் வீட்டாருக்கு தெரியவர, உடனே அவர்கள் மகனுக்கு வேறு ஒரு இடத்தில் அவசர அவசரமாக வேறு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து பிரதீப், பிரமிளாவிடம் கூற, இருவருக்கும் அப்போதே பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இருவரும் சமரசம் ஆகியுள்ளனர்.

அதன் பின் இருவரும் தீபாவளியை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். இதற்கிடையில் பிரதீப்பிற்கு மீண்டும், வீட்டில் பெண் பார்க்க ஆரம்பிக்க, ஆத்திரம் அடைந்த பிரமிளா, என்னை விட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.

இப்பவே எனக்கு தாலி கட்டு, இப்படியே இந்த வீட்டிலேயே ஒன்றாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரம் அடைந்த பிரமிளா வீட்டின் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து, தலையிலும், மார்பிலும் சரமாரியாக வெட்ட, பிரதீப் அந்த இடத்திலே சரமாரியாக சுருண்டு விழுந்தார்.

அவரின், சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதீப்பின் பெற்றோர் பிரமிளா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website