சென்னை SRM பல்கலைக்கழக விடுதியில் துப்பட்டாவால் பஞ்சாபை சேர்ந்த மாணவி தற்கொலை
செங்கல்பட்டு பொத்தேரி என்னும் இடத்தில் SRM பல்கலை கழகம் உள்ளது. இங்கு மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்த மாணவியின் பெயர் ஆஷாராணா என்பதும் 2ஆம் ஆண்டு B.Tech படித்துவருகிறார். இந்நிலையில், நேற்று இரவு மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்தார்.
பலர் கதவை தட்டி நெடு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தால் கல்லூரி விடுதி நிர்வாகம் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கியது தெரியவந்தது. SRM கல்லூரி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற தற்கொலைகள் அடிக்கடி நடக்கிறது. கடந்த மாதம் அதே கல்லூரி மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி கொண்டு மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.