தூத்துக்குடியில் ரஜினியை..நீங்கள் யார் ? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் பிடிபட்டார் !!
தூத்துக்குடி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் (24 வயது) தனது வீட்டு முன்பு நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வடபாகம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23 வயது) மற்றும் கால்டுவெல் காலனி மணி (23), ஆசிரியர் காலனி சரவணன் (22) ஆகியோர் பைக்கை திருடியது தெரிவந்தது.
காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு அவர்களை கைது செய்தனர் அதோடு அவர்கள் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைதான 23 வயதாகும் சந்தோஷ் என்பவர் 2018ல் துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த போராட்டத்தில் தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் காயமுற்றவர் களிடம் ஆறுதல் கூற வந்த போது, நீங்கள் யார்? என கிண்டலாக கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் செய்த செயல் வைரலானது அப்போது ரஜினி அமைதியாகவும் பொறுமையாகவும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.