சென்னை எழும்பூர் ரெயில்வே கட்டிடத்தில் மேல் இருந்து குதித்த முதியவர்

January 22, 2021 at 11:27 am
pc

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைந்திருக்கும் கட்டிடம் முதியவர் ஒருவர் கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக்கொண்டிருந்தார். பலர் தடுத்தும் அவர் அதை காதில் வாங்காமல் சென்று ஒருகட்டத்தில் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றார்.

அங்கே அமர்ந்துகொண்டு தரையை வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்த பயணிகள் அவரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். சிலர் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி கொண்டிருந்தனர். அதேவேளை அங்கு வந்த ரெயில்வே போலீசாரும் இதை கண்டும் காணாதது போல சென்றனர்.

திடீரென அந்த முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டனர். சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கே வரவில்லை. இதற்கிடையில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அந்த முதியவர் இறந்துவிட்டதாகவும்,
உடலை கைப்பற்ற ரெயில்வே போலீசார் வருவார்கள் என்றும் கூறி சென்றுவிட்டனர்.

ரத்தவெள்ளத்தில் இருந்த முதியவரின் உடல் நீண்டநேரம் அங்கேயே கிடந்தது. இதனால் பயணிகள் ஆதங்கம் அடைந்தனர். சிலர் ஆவேசமாக எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website