“போதையில் சிறுவனை தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்” !! புகாரளித்த பக்கத்துக்கு வீட்டுக்காரர்.

December 17, 2019 at 10:22 am
pc

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரவீன் குமார், தன்னையும், தனது 7 வயது சிறுவனையும் மதுபோதையில் தாக்கியதாக அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர் புகாரளித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரில் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது பக்கத்துக்கு வீட்டுக் காரரான தீபக் சர்மா தானும் தனது மகனும் பேருந்திற்காக காத்திருந்த போது, பிரவீன் குமார் போதையில் காரில் இருந்து வந்து தன்னையும், தனது 7 வயது மகனையும் அடித்ததாக போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். முதலில் இந்த புகாரை ஏற்க மறுத்த போலீசார், சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால் மேலிடத்தில் புகாரளிக்குமாறு கூறினார்கள் எனவே தீபக் சர்மா அப்பகுதி எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரித்த அப்பகுதி காவல்துறை எஸ்.பி. அகிலேஷ் நாராயணன், இருவரும் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடுகளில் வசிக்கிறீர்கள். இரு தரப்பிலும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை சேகரித்துள்ளோம் அதன் அடிப்படையில் விசாரணை செய்கிறோம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து, பதிலளித்த கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார், தீபக் சர்மா கூறியது உண்மையல்ல, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருப்பவன் நான், எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர், நான் எப்படி ஒரு சிறுவனை தாக்குவேன். அவர்கள் தான் நான் காரில் இருந்து வரும் போது என்னை தாக்கினார்கள் இது தான் நடந்தது என கூறியுள்ளார். பிரவீன்குமார் 2008ம் ஆண்டு ஒரு மருத்துவரை மதுபோதையில் தாக்கியது தொடர்பாக அவர் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website