நம்ப முடியாத செயல்.., செய்து காட்டி அசத்திய ஊர்மக்கள்
நாகலாந்தில் மலைச்சரிவில் இருந்து லாரி ஒன்று உருண்டு ஓடி கவிழ்ந்தது. பொதுவாகவே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர மிதவை வாகனங்கள் இப்படி மலைச்சரிவில் இருந்து உருண்டு விழுவது உண்டு. அவ்வாறு நடந்தால் அவற்றை மீட்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
அதிகாரிகள், தீயணைப்புத்துறை போன்று மீட்புப்படையினர் தான் தேவை. ஆனால் அவர்கள் எந்திரங்களின் உதவியோடுதான் இதை மீட்க முடியும். இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாகலாந்தில் உள்ள கிராம மக்கள் களத்தில் இறங்கினர்.
கிராம மக்கள் செய்துள்ள காரியம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாகலாந்தை சேர்ந்த கிராம மக்கள், மலைச்சரிவில் இருந்து சரிந்து விழுந்த லாரியை கண்டுள்ளனர். பின்னர் தாமதிக்காமல், தாங்களே மீட்டு எடுக்கலாம் என்று கூட்டாக யோசித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
கயிறுகளால் கட்டி அனைவரும் லாரியை இழுத்துள்ளனர். உற்சாகமாக சத்தம் எழுப்பிக் கொண்டனர். அந்த உற்சாகம் கொஞ்சம் கூட குன்றாமல் சரிவான பகுதியில் இருந்து நேரான பாதைக்கு லாரியை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.