இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா.!

September 17, 2021 at 11:45 am
pc

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் இன்று (17-09-21) கொரோனா தொற்றால் 34,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3,33,81,728 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 320 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,44,248 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,98,424 உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,39,056 பேருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.64% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.03% ஆக குறைந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website