கொரோனா 3வது அலை… அதிகமாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பகீர் எச்சரிக்கை தகவல்

May 11, 2021 at 7:20 am
pc

இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை அக்டோபர் மாதம் தாக்கும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஜுலை மாதத்தில் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளனர்.

தற்போது அதிகமாக பாதிப்பிற்குள்ளாகி உள்ள உத்திரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் விரைவில் சரிவைச் சந்திக்கும் என்று ஆய்வில் வெளியாகியுள்ளது.

மேலும் அக்டோபர் மாதத்தில் 3வது கொரோனா அலை வந்தாலும் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது என்றும் பேராசிரியர்கள் கூறியுள்ளார்.

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவர் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம் பெரியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள தருணத்தில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பதே இதற்குக் காரணமாம். கனடாவில் 12 வயது முதல் 15 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு உலகின் முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு அமெரிக்காவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் அலையில் 3 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குழந்தைகள் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இதனால் 3வது அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website