தமிழை என்னால் கற்க முடியவில்லை” – மோடி வருத்தம்!

March 4, 2021 at 6:34 am
pc

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காவோ அல்லது அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவோ எப்போது தமிழகம் வந்தாலும் அவர் தமிழில் பேசுவது வழக்கம். அந்தவகையில், பாரதியார் கவிதைகளையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாக செய்து வருகிறார்.

இதையடுத்து, பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.

அப்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த உலகத்திலேயே மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று. என்னால் தமிழ் சரியாக கற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்களும் பல வகையான மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website