வேலை நேரத்தில் விளையாட்டா ? சிக்கினார் google CEO

January 20, 2021 at 5:04 pm
pc

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடபெற்ற டெஸ்ட் தொடர் போட்டி நிறைவு பெற்றுவிட்டது. ஆனால், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி வரலாறு படைத்தது.

ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வீழ்த்தியதே இல்லை. அந்த வரலாற்றை இந்திய அணி படைத்துள்ளது. இந்திய இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியை துவைத்து எடுத்துவிட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியை பாராட்டி கூகுளின் சிஇஓ சுந்தர்பிச்சை ட்விட் செய்துள்ளார். இதை சுட்டிக்காட்டிய பிரபல செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் சந்திரா ஆர் காந்த், வேலை நேரத்தில் ஏன் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கிறாய் என்று யாராவது கேட்டால் கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூட டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கிறார் என அவரது ட்விட்டை காட்டுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதே போல் விப்ரோ நிறுவன தலைமை அதிகாரியும் இது போன்று செய்துள்ளார்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website