17 வயது பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 27 வயது பெண் ஆசிரியை-டியூசனால் வந்த விபரீதம்.
27 வயது இளம் ஆசிரியை ஒருவர் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் இருக்கும் பள்ளியில் ஆசியராக வேலை செய்து வரும் 27 வயது பெண் ஆசிரியர் ஒருவர், தன்னுடைய வீட்டில் டியூசன் எடுத்து வந்துள்ளார்.
அதன் படி இவருடைய வீட்டிற்கு மாணவர்கள் டியூசன் படிக்க வந்து சென்றுள்ளனர். அதன் படி 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் இவரிடம் டியூசன் படிக்க வந்துள்ளார்.
சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருடைய பெயரை பொலிசார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 27-ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு டியூசன் சென்ற மாணவன், அதன் பின் வீடு திரும்பவேயில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக பெண் ஆசிரியரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லை, பெற்றோர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அவர்கள், அவரிடம் கேட்ட போது, நீண்ட நேரம் எதுவும் தெரியாது என்றே கூறியுள்ளனர்.
அதன் பின் ஒரு கட்டத்தில், அவர்கள் மிரட்டி கேட்ட போது, தங்களுடைய மகள், மாணவனுடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்,
இதையடுத்து பொலிசார் உடனடியாக பெண் ஆசிரியரின் வீட்டிற்கு விரைந்து சோதனை மேற்கொண்ட போது, வீட்டில் நகை மற்றும் பணம் போன்றவை எடுத்துச் செல்லப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு பேரின் செல்போன் சிக்னலை வைத்து பொலிசார் பிடிக்க முயன்ற போது, இருவருமே போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். இதனால், பொலிசார் மைனர் சிறுவனை கடத்திவிட்டதாக கூறி, பெண் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவன் 2 மாதத்திற்கு முன்பு தான் டியூசனில் சேர்ந்துள்ளான்.
அப்போது மற்ற மாணவர்களுக்கு எல்லாம் குறைந்த நேரத்தில் டியூசன் எடுத்துவிட்டு, இந்த மாணவனுக்கு மட்டும், குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் டியூசன் எடுத்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்தாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது