பாலியல் தொழிலாளார்கள் தமிழக ஊடகங்கள் அளவிற்கு மோசமானவர்கள் இல்லை – நித்தியானந்தா ஆவேசம்

February 23, 2020 at 4:26 pm
pc

தமிழக ஊடகங்களை விட மும்பை சிவப்பு விளக்கு பகுதியிக் இருக்கும் பாலியல் தொழிலாளார்கள் சிறந்தவர்கள் என நித்தியானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

பாலியல், கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தலைமறைவாக இருக்கும் நித்தியனானதா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், முபையில் சிவப்பு விளக்கு (Redlight area) பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இது போன்ற தொழிலில் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக ஊடகங்களுடன் அவர்களை ஒப்பிட்டு அவதூறு கிளப்ப வேண்டாம். தமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறந்தவர்கள். தமிழக ஊடகங்கள் அளவிற்கு அவர்கள் மோசமானவர்கள் கிடையாது. எனவே தமிழக ஊடகங்களை சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கு இணையாக ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்திற்கு இனிமேல் வரப்போவதில்லை. தமிழக ஊடககங்களை பொறுத்தவரை தான் இறந்து விட்டதாகவும் நித்யானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்நாடக அரசு நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் எங்கே தலைமறைவாகியுள்ளார் என்பதை போலீஸ் கண்டுபிடிப்பதில் சவாலாக உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website