ஸ்ரீதேவியின் 2வது நினைவு நாளில் செல்ல மகள் ஜான்வி கபூரின் “மிஸ் யூ” புகைப்படம் !!
நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது நினைவு நாளான இன்று அவரது மூத்த மகள் ஜான்வி கபூர், தான் தினமும் உங்களை மிஸ் செய்வதாக தனது இன்ஸ்டாகிராமில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. துபாயில் தனது உறவினர் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவர் இறந்த போது மது போதையில் இருந்தது தெரியவந்தது. ஸ்ரீதேவியின் இரண்டாவது நினைவு நாளான இன்று மகள் நடிப்பதை பார்க்காமலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என பாலிவுட் நடிகர்கள் வருத்தம் தெரிவித்துவருகிறார்கள்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள். அதில் மூத்த மகள் ஜான்வி அம்மா செல்லம், குஷி அப்பா போனி கபூர் செல்லம். ஜான்வி தன் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். அவர் நடித்த முதல் படமான தடக் ஷூட்டிங் துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படம் ரிலீஸான போது இல்லை. மகளின் முதல் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ஸ்ரீதேவி அதை கடைசி வரை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.
தாயின் நினைவு நாளான இன்று அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தினமும் அவரை மிஸ் பண்ணுவதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி தடக் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் இல்லாமல் குஷி இருந்து விடுவாள். ஆனால் ஜான்வியால் நான் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்கவே முடியாது என்று ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.